நரசிங்கத்தில் பொதுமக்களை கடித்துக்குதறிய வெறிநாய்கள்

நரசிங்கத்தில் பொதுமக்களை கடித்துக்குதறிய வெறிநாய்கள்
அக்.17 மதுரை மாவட்டம், நரசிங்கம் ஊராட்சியில் கடந்த சில  மாதங்களாக தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சனிக்கிழமை இரவு நரசிங்கம் ஊருக்குள் தெரு நாய் ஒன்று வெறி பிடித்து பொதுமக்களை கடிக்க தொடங்கியது. வெறி நாய்  கடித்ததில் நரசிங்கம் பகுதியைச் சேர்ந்த அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் புறநகர் மாவட்டச் செயலாளர் கிரிஷ் பாக்கியம் (வயது 29), செல்வராஜ் (வயது 59 ), சதீஷ் (வயது 31), மணவாளன் (வயது 48), தாமோதரன் (வயது 23) லெட்சுமி (வயது 42),  பெண்கள் உள்ளிட்ட 11 பேர் காயமடைந்தனர்.  காயமடைந்த அனைவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் பயந்து கொண்டு வீட்டிற்குள்ளேயே உள்ளனர். இதற்கிடையே நரசிங்கம் மற்றும் ஒத்தக்கடை கிராமத்தில் அதிகரித்து வரும் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த தமிழக அரசு மற்றும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என ஒத்தக்கடை ஊர் பொதுமக்கள் ஆற்றல் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளரும், நாம் தமிழர் கட்சி ஒத்தக்கடை ஊராட்சி தலைவருமான ரபீக் ராஜா மதுரை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று மனுவினை கொடுத்து கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் சமூக ஆர்வலர் ரபீக் ராஜாவுக்கும், ஆற்றல் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும் அப்பகுதி ஊர் பொதுமக்கள் கூறுகையில், யாரும் மக்கள் உணர்வுகளை கண்டு கொல்லாத நிலையில் சமூக பிரச்சினைகளை கையில் எடுத்து வருகின்றனர் என்று கூறி, நன்றி தெரிவிக்கும் விதமாக பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
Previous Post Next Post