தீ விபத்தில்லா தீபாவளி கொண்டாட தீயணைப்பு மீட்பு துறையினர் எச்சரிக்கை

தீ விபத்தில்லா தீபாவளி கொண்டாட 
தீயணைப்பு மீட்பு துறையினர் எச்சரிக்கை 

இராணிப்பேட்டை மாவட்ட
தீயணைப்பு மீட்புப்பணிகள் துறையினர்
தீவிபத்தில்லா தீபாவளி  பொதுமக்கள் கொண்டாட
செய்ய கூடாதவை 
 செய்ய வேண்டியவைகளை  குறித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டனர் அதில் கூறியிருப்பதாவது 
பெரியவர்கள் முன்னிலையில் சிறுவர்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

 பட்டாசு வெடிப்பதற்கு முன் இரண்டு வாலி நிறைய தண்ணீர் வைக்க
வேண்டும்.
பட்டாசுகளை வெடிக்க நீண்ட குழல் வத்திகளை பயன்படுத்த வேண்டும்.
தீப்பிடிக்காத இருக்கமான பருத்தி ஆடைகளை அணிந்து பட்டாசு வெடிக்க
வேண்டும்.
 காலில் செருப்பு அணிந்து பட்டாசு வெடிக்க வேண்டும்.
பட்டாசு வெடிப்பதை தொலைவில் இருந்து கண்டுகளிக்க வேண்டும்.
பட்டாசு வெடிக்கும்போது வீட்டு வளர்ப்பு பிராணிகளை வீட்டுற்குள்
இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
பட்டாசு வெடிக்கும்போது கண்களுக்கு பாதுகாப்புக்கு கண்ணாடி அணிவது
நல்லது.

பட்டாசு வெடிப்பதற்கு பாதுகாப்பான இடமா என்பதை கவனித்து வெடிக்க
வேண்டும்.
கம்பி மத்தாப்புகளை பயன்படுத்திய பின் தண்ணீரில் மூழ்கடிக்க வேண்டும்.
பட்டாசு பெட்டிகளில் உள்ள அறிவுரைகளை படித்து பின்பற்ற வேண்டும்.
ஒரு நேரத்தில் ஒரு பட்டாசினை மட்டுமே வெடிக்க வேண்டும்.
ராக்கெட் மற்றும் அவுட் போன்ற பட்டாசுகளை திறந்த மைதானத்தில்
வைத்து வெடிக்க வேண்டும்.
பட்டாசு தீக்காயத்தின் மீது தண்ணீரை ஊற்றி முதலுதவி செய்ய
வேண்டும்.

தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள தீயணைப்பு
நிலையத்தின் உதவியை நாட வேண்டும்.
உடலில் தீ விபத்து ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டியது நில் படு. உருளு பட்டாசு வெடிக்கும்போது தளர்வான ஆடைகள் மற்றும் எளிதில் தீப்பிடிக்கும்
ஆடைகளை அணிந்து வெடிக்கக்கூடாது.

பட்டாசுகளை சட்டை பைகளில் வைத்திருத்தல் கூடாது.
காய்ந்த புல்வெளிகளில் அருகே பட்டாசு வெடிக்கக் கூடாது.
ராக்கெட், அவுட் போன்ற பட்டாசுகளை தென்னை மரம் அருகே வெடிக்கக்
கூடாது.
விளக்குகள், அடுப்புகள் அருகே பட்டாசுகளை வைக்கக்கூடாது.
கைகளில் பிடித்து பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

பட்டாசு வெடிக்கும்போது முகத்தினை பட்டாசு அருகில் வைக்கக் கூடாது.
வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கவோ காலால் மிதிக்கவே கூடாது.
பட்டாசுகளை அடுத்தவர் மீதோ பிராணிகள் மீதோ வீசக்கூடாது.
பட்டாசுகளை கண்ணாடி பாட்டில்கள் உலோகப்பொருட்கள் ஆகியவற்றினுள்
வைத்து வெடிக்கக் கூடாது.
வெடிக்காத பட்டாசுகளை திரும்ப வெடிக்க முயற்சிக்க வேண்டாம்.
பறக்கும் தன்மை கொண்ட பட்டாசுகளை அதிக காற்று வீசும் நேரத்தில்
வெடிக்கக் கூடாது.

குடிசை வீடுகள் வைக்கோல் போர்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய
பொருட்கள் இருக்கும் இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.
மருத்துவமனைகள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வயதானவர்கள்
உள்ள இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

தீக்காயம்
வாழைப்பட்டைச் சாறு எண்ணெய்
ஏற்பட்டால் இங்க்
போன்றவற்றை வைக்கக் கூடாது.
போக்குவரத்து நிறைந்த மற்றும் பொதுமக்கள் நிறைந்த இடங்களில்
பட்டாசு வெடிக்கக் கூடாது

தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக
அருகில் உள்ள தீயணைப்பு
நிலையத்தின் உதவியை நாட வேண்டும்
இராணிப்பேட்டை
04172-272 699
9445086123
சிப்காட்-இராணிப்பேட்டை
04172-244 005
9445086122,
ஆற்காடு
04172-235 088
9445086116,
கலவை
04173-242 001
9445086507,
சோளிங்கர்
04172-263 300
9445086124,
அரக்கோணம்
04177-236 101
9445086115,
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது 

செய்தியாளர் 
எஸ்.ஆனந்தன்
Previous Post Next Post