கிள்ளை பேரூராட்சியில் பணிபுரியும் துப்புணர்வு பணியாளர் மற்றும் தூய்மை காவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது கிள்ளைஅரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடைபெற்ற முகாமுக்கு மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ் தலைமை தாங்கினார் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வி வரவேற்றார் சிறப்பு அழைப்பாளராக பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா முத்துக்குமார் துணைத்தலைவர் கிள்ளை ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர் முகாமில் கலந்துகொண்ட துப்புரவு பணியாளருக்கு தூய்மை காவலர்களுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டு காய்ச்சல் சளி போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது உடன் மருந்து மாத்திரை வழங்கப்பட்டது மேலும் முகாமில் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் அலுவலர்கள் செவிலியர்கள் பேரூராட்சி அலுவலர்கள் முடிவில் பேரூராட்சி எழுத்தர் செல்வராஜ் நன்றி கூறினார்