மதுரை மாவட்டம் ஒத்தக்கடை ஊராட்சி பகுதியில் உள்ள மலைச்சாமிபுரம் அரசு மாணவர் விடுதி எதிர்புறம் தங்கப்பாண்டி (வயது 41) என்பவர் பத்து வருட காலமாக சொந்தமாக எவர்சில்வர்பட்டறை நடத்தி வருகிறார்.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை ஊராட்சி பகுதியில் உள்ள மலைச்சாமிபுரம் அரசு மாணவர் விடுதி எதிர்புறம் தங்கப்பாண்டி (வயது 41) என்பவர் பத்து வருட காலமாக சொந்தமாக எவர்சில்வர்பட்டறை நடத்தி வருகிறார். 
கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு பட்டறை பணிக்காக வைத்திருந்த எண்ணற்ற இரும்பு டைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிழைப்பு நடத்த மனைவியின் தாலியை விற்று, பட்டறைக்கு இரும்பு மிஷின் மற்றும் டைகளை வாங்கியுள்ளதாக மனவேதனையுடன் கூறுகிறார் தங்கப்பாண்டி.

 ஏற்கனவே இவர் பட்டறையில் வேலை செய்த ஒரு நபர் வேலையை விட்டு நின்று உள்ளார் அவரிடம் பட்டறை சாவி ஒன்று கொடுத்து வைத்துள்ளதாகவும் வேலையை விட்டு சென்ற பின்னர் அவர் அந்த சாவியை என்னிடம் ஒப்படைக்கவில்லை மேலும் இன்னொரு நபர் என் பட்டறையில் வேலை செய்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் தங்கப்பாண்டி எவர்சில்வர் பட்டறையில் இருந்து 12 டைகள் காணாமல் போய் உள்ளது. வெளி நபர்கள் உள்ளே வந்து எடுத்ததற்கு எந்த ஒரு அறிகுறியும் இல்லை எனவும் இது தொடர்பாக ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கவில்லை எனக் கூறுகிறார் தங்கப்பாண்டி. 

இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்து நான்கு மாதம்  கடந்த நிலையில் அரசு துவக்கப்பள்ளி எதிரேயுள்ள இரும்பு கடையில் எடைக்கு சில பொருட்கள் வாங்க சென்ற போது, தங்கப்பாண்டியின்  பட்டறையில் காணாமல் போன இரும்பு டை அந்த இரும்பு கடையில் இருப்பதைக் கண்டு  அதிர்ச்சி அடைந்த தங்கப்பாண்டி  தனது சொந்த டையை 150 ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்கி கொண்டு நேராக ஒத்தக்கடை காவல் நிலையத்திற்கு சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தள்ளார்.

 மேற்படி, விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட தங்கப்பாண்டிக்கு எந்த தகவலும் அளிக்காமல் சுமார் 7 மாத காலமாக வழக்கு எதுவும் பதியாமல் தாமதித்து வருவதாதவும்  காணாமல் போன 70 -கிலோவுக்கும் மேற்பட்ட இரும்பு டைகளை என் பட்டரையிலேயே வேலை செய்தவர்கள் திருடி என் பட்டறைக்கு அருகிலேயே உள்ள இரும்பு கடையில் விற்றுவிட்டு  சென்று இருக்கலாம் எனவும் இரும்பு கடையில் உள்ளவர் யாரிடம் இந்த டைகளை வாங்கினோம் என கூட வா தெரியாது அவருக்கு என கேள்வியும் எழுப்புகின்றார் தங்கப்பாண்டி. 

சந்தேகப்படும் நபர்களையும் கூறியுள்ளேன் என் பட்டறையில் திருடிய டைகளை அங்கு இருக்கும் இரும்பு கடையில் விற்று உள்ளனர் அதற்கு ஆதாரமாக என் பட்டறையில் உள்ள டை இங்கேதான் இருக்கிறது என்று அதை விலை கொடுத்தும் வாங்கி காவல் நிலையத்திலும் ஒப்படைத்து உள்ளேன் முறையாக இதை விசாரித்து இருந்தால் யார்? குற்றவாளிகள் என தெளிவான உண்மை வெளிச்சத்திற்கு வந்திருக்கும் ஆனால் அதை விட்டுவிட்டு இதுவரைக்கும் எந்த ஒரு வழக்கும் பதியாமல் என்னை இத்தனை மாத காலமாக என்னை அலைக்கழிக்கப்பட்டதால் மனதளவில் பாதிக்கப்பட்டு என் தொழிலையே செய்ய முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன் என கண்ணீருடன் கூறுகிறார் தங்கப்பாண்டி. 

மனதை தேற்றிக்கொண்டு மீண்டும் தன் பணியை செய்யலாம் என்று பட்டறையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது என் பட்டறையில் வேலை செய்த நபரின் நண்பர்கள் என்று கூறிக்கொண்டு மது போதையில் என் பட்டறைக்குள் வந்து ஏழு நபர்கள் என்னை மிரட்டினார்கள் எப்படி நீ தொழில் செய்கிறாய் என்று பார்ப்போம் என கொலை மிரட்டலும் விடுத்தார்கள் கடனை வாங்கி இருப்பதை அனைத்தும் அடகு வைத்து சில பொருட்களை விற்று மிகவும் கஷ்டப்பட்டு நானும் என் மனைவியும் நேர்மையாக இந்த தொழிலை செய்து வருகிறோம் ஆனால் என்னுடைய பொருட்கள் காணாமல் போனது மட்டுமில்லாமல் அந்தப் பொருள் எங்கே விற்கப்பட்டுள்ளது என கண்டுபிடித்து அதையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்த பின்பும் எனக்கு எந்த ஒரு நியாயமும் இதுவரை கிடைக்கவில்லை என தன் மனக்குமுறலை கொட்டித் தீர்க்கிறார் தங்கப்பாண்டி. முறையாக விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்து மீண்டும் என் தொழிலையும் என் குடும்பத்தையும் வாழ வையுங்கள் என கண்ணீர் மல்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்கள் தங்கப்பாண்டி மற்றும் அவர் குடும்பத்தினர்கள்.


 ஒரு சாமானியன் காவல் நிலையத்தில் புகார் அளித்தால் அதற்கு நீதி கிடைப்பதில்லை அப்படியென்றால் சட்டம் என்பது யாருக்காக வலுத்தவர்களுக்கு ஒரு சட்டம் வழி இல்லாதவர்களுக்கு ஒரு சட்டம் என இந்தப் பாகுபாடு என்றைக்கு களையப்படுகிறதோ அன்று தான் இவர்கள் போன்றவர்களுக்கு விடிவு காலம் பிறக்கும்.
Previous Post Next Post