சிவசேனா கட்சியின் மாநில செயலாளர் குரு ஐய்யப்பன் வீடு புகுந்து தாக்கிய ஒருவர் கைது.2 பேர் தலை மறைவு
தேனி மாவட்டம் பழனி செட்டிபட்டி பேரூராட்சி, பெரிய தெருவில் சிவசேனா கட்சியின் மாநில செயலாளர் குரு ஐய்யப்பன் வீடு உள்ளது.
நேற்று முன்தினம் காலை சிவனோ கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முருகவேல், அவருடை நண்பர்கள் சங்கிலி ஆண்டி, உள்பட மூன்று நபர்கள் சேர்ந்து சிவசேனா கட்சியின் மாநில செயலாளர் குரு ஐய்யப்பன், மற்றும் அவருடைய மனைவி இரண்டு பேரையும் நேற்று முன் தினம் அத்துமீறி வீடு புகுந்து தாக்கினர்.
உடனடியாக வீடு புகுந்து தாக்கியவர்கள் மீது பழனி செட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
வீடு புகுந்து தாக்கிய முருகவேலை கைது செய்தனர்.
இரண்டு பேர் தலை மறைவாக உள்ளனர்.
இந்த சம்பவத்தால் தேனி மாவட்டத்தில் அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்