மரபு வழி வைத்திய முகாம்
தேனி மாவட்டம் தேனிமுல்லை நகரில் ஸ்ரீ ஞான குரு பழனி ஆண்டவர் அறக்கட்டளை மற்றும் தேனி மண்டல அறக்கட்டளைகள் சார்பில் மரபு வழி வைத்திய முறையிலான மருத்துவ முகாம் நடைபெற்றது.
மருத்துவ முகாமில் அறக்கட்டளை நிறுவனர் ஸ்ரீ ஞானகுரு செ செந்தில் குமார் அவர்கள் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். அறக்கட்டளை மாநில தலைவர் திரு முனைவர் பா ராஜேந்திர பிரசாத் அவர்கள் மரபு வழி வைத்திய முறையின் பயன்கள் பற்றி எடுத்துக்கூறினார். மருத்துவ முகாமில் டாக்டர் பாலகிருஷ்ணன், டாக்டர் ஜானகிராமன், டாக்டர் சேகர், டாக்டர் சரவணன், டாக்டர் ஹெமிலா, டாக்டர் சந்தானமாரி ஆகியோர் பொது மக்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார்கள். முகாமில் அனைத்து மாநில, மண்டல மற்றும் இணைப்பு அறக்கட்டளை பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.