மேல திருக்கழில் பாலை கிராமத்தில் கொள்ளிட வெள்ளை நீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் மதிய உணவாக 600 நபருக்கு சாம்பார் சாதம் வழங்கப்பட்டது
. உதவி ஆளுநர் திரு. எம் .தீபக் குமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். முன்னிலை மேல திருக்கழிபாலை பஞ்சாயத்து தலைவர் திருமதி துர்கா திருமூர்த்தி முன்னிலை வகித்தார். சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு நன்கொடை வழங்கி கலந்து கொண்ட ரோட்டரி பெருமக்கள் திரு டாக்டர் முகமது யாசின் ,திரு டாக்டர் ஜவகர் ,திரு சுப்பையா, திரு விஸ்வநாதன், திரு சிவசங்கரன் ,திருபன்னா லால் ஜெயின் , திரு டேவிட் ஏகாம்பரம் ,திரு அருள் ஆகியோர் . மேலும் ரோட்டரி மாவட்ட அன்னதான கமிட்டி தலைவர் சந்திரசேகர் அவர்கள் அரிசி வழங்கினார்கள். நண்பர் ஆனந்தன் கலந்து கொண்டார். பொருளாளர் கேசவன் அனைவருக்கும் நன்றி கூறினார்.