மதுரை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் செல்போன் மூலம் டார்ச் லைட் ஒளிவீச்சு ஆர்ப்பாட்டம்

மதுரை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் செல்போன் மூலம் டார்ச் லைட் ஒளிவீச்சு ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட குழு சார்பில் மதுரை சமயநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே தேசிய விவசாயிகள் கோரிக்கை நாளான செப்டம்பர் 1-ம் தேதி அன்று மாலை விவசாயிகள் செல்போன் மூலம் டார்ச் லைட் ஒளிவீச்சு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன்  தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவரில் ஒருவர் இரவிவர்மா முன்னிலை வகித்தார். மேலும் வி.தொ.ச.மா.செ ஜோதி ராமலிங்கம், கள்ளிக்குடி த.வி.ச பொறுப்பாளர் தனுஷ்கோடி, வாடிப்பட்டி த.வி.ச.செயலாளர் தவமணி, பேரையூர் செயலாளர் செல்லவேல், சமயநல்லூர் மேற்கு ஒன்றிய குழு பெத்தனசாமி ஆகியோர் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சந்தனம் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார். 

கோரிக்கை

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு மின்சார சட்டத்திருத்த மசோதா 2022-ஐ திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளின் 13 மாத கால கோரிக்கைகளை ஒப்புதல் அளித்த படி மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிப்படி நெல் குவிண்டாலுக்கு ரூ.2500-ம், கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரமும் விலை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும் கோவில்,மடம், அறக்கட்டளை மற்றும் வக்ஃபோர்டு குத்தகை விவசாயிகளின் தொடர் பேரிடர் பதவிக்கு கால குத்தகை பாக்கியை தள்ளுபடி செய்திடு, வருவாய் நீதிமன்றத்தை மூடிடு, உரி தேங்காய்களுக்கு கிலோ ரூ 50 நிர்ணயம் செய்திடு, கொப்பரை கிலோ ரூ 150 க்கு கொள்முதல் செய்திடு, கடந்தாண்டு சம்பா தாளடி பருவ காப்பீடு திட்ட இழப்பீட்டை அறிவித்து வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதில், பவர்கவுஸ் காட்டுராஜா, கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post