பெரியகுளத்தில் அதிமுக பிரமுகரிடமிருந்து 50 லட்சம் பணத்துடன் கார் ஓட்டுநர் மாயம் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் ஸ்ரீதர் கைது

பெரியகுளத்தில் அதிமுக பிரமுகரிடமிருந்து 50 லட்சம் பணத்துடன் கார் ஓட்டுநர் மாயம் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் ஸ்ரீதர் கைது 


தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை தெற்கு ரத வீதி தெருவில் குடியிருப்பவர் குழந்தைவேல் மகன் நாராயணன் இவர் அதிமுக தேனி மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ஆவார் இவரிடம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஓட்டுனராக பணியாற்றி வந்தவர் பெரியகுளம் வடகரை அரண்மனை தெரிவித்த வீராச்சாமி மகன் ஸ்ரீதர்

இந்நிலையில் கடந்த இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு நாராயணன் தனது சொந்த வேலை காரணமாக சென்னை சென்றிருந்த நிலையில் நாராயணனின் நண்பர் ஆன சென்னையில் உள்ள ஆனந்தன் என்பவர் பெரியகுளத்தில் உள்ள அவரது சகோதரன் பாஸ்கரன் என்பவருக்கு வீட்டு கட்டுமான பணி பராமரிப்பு செலவு மற்றும் விவசாய நிலத்தில் விவசாய வேலைகள் செய்வதற்காக ரூபாய் 50 லட்சம் நாராயணன் வசம்  பாஸ்கரனிடம் கொடுக்க சொல்லி ஐம்பது லட்சம் கொடுத்து அனுப்பியதாக கூறப்படுகிறது

 இந்நிலையில் நாராயணன் மற்றும் ஓட்டுனராக   ஸ்ரீதர் ஆகிய இருவரும் சென்னையிலிருந்து பெரியகுளம் வந்து கொண்டிருந்த பொழுது   தேனி ஆண்டிபட்டியில் நாராயணனின் குடும்ப நண்பர் ஒருவர் இறந்துவிட்ட நிலையில் அவரின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து விட்டு தனது ஓட்டுநர் ஸ்ரீதர் இடம் ரூபாய் 50 லட்சத்தை கொடுத்து வாகனத்தை எடுத்துக்கொண்டு பெரியகுளத்தில் உள்ள  வீட்டில் நிறுத்திவிட்டு அங்கு இகுக்கும் படி கூறி நாராயணன் தேனி மாவட்டச் செயலாளர் சையது கான் வாகனத்தில் ஏறிக்கொண்டு வாகனத்தை அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது

 இந்நிலையில் இறுதிச் சடங்கு முடிந்து வீடு திரும்பி நாராயணன் வீட்டில் வந்து பார்த்தபோது வீட்டிற்கு முன் பக்கம் தனது வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது அதை பார்த்துவிட்டு
ஸ்ரீதரைப் பற்றி வீட்டில் உள்ள நாராயணன் மனைவியிடம்  கேட்டபோது வாகனத்தின் சாவியை மட்டும் கொடுத்துவிட்டு  சென்றதாக கூறியுள்ளனர் உடனே நாராயணன் சாவியை பெற்றுக் கொண்டு வாகனத்தில் பணம் உள்ளதா என்று போய் பார்த்த போது வாகனத்தில் பணம் இல்லை அதிர்ச்சி அடைந்த நாராயணன் ஸ்ரீதர் கைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது தெரியவந்து உடனே நாராயணன் என்பவர் ஸ்ரீதர் வீட்டிற்கு சென்று பார்த்த போது வீடு பூட்டி இருந்ததாகவும் இதனைத் தொடர்ந்து சந்தேகம் அடைந்த நாராயணன் ஸ்ரீதர் 50 லட்ச ரூபாயை மோசடி செய்ததாக கூறி பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இந்நிலையில் புகார் மனுவை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் ஸ்ரீதர் காணாமல் போனதாக கூறி அவரது மனைவி பெரியகுளம்  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இதனால் ஸ்ரீதரை தேடும்படியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்  இந்நிலை இது ஒருபுறம் இருக்க

அதிமுகவில் ஓபிஎஸ் இபிஎஸ் இரு தரப்பினர் இடையே பல்வேறு கட்சி பூசல் உள்ளிட்ட நீதிமன்ற வழக்கு என பல்வேறு பிரச்சனைகள் நடந்து கொண்டு இருப்பதால்

ஓபிஎஸ் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பனுக்கு 3 கோடி ரூபாய் கொடுப்பதாக கூறி முன்பணம் கொடுக்கப்பட்ட நிலையில் மீதப்பணம் கொடுப்பதற்காக நாராயணன் வாகனத்தில் பணம் கொண்டு வந்த போது நாராயணனின் ஓட்டுநர் ஸ்ரீதர் பணத்தை எடுத்து  சென்றதாகவும் பெரியகுளம் பகுதியில் அரசியல் வட்டாரத்தில்  பேசப்பட்டு வந்தது

இந்நிலையில் அதிமுக பிரமுகர் நாராயணனின் கார் ஓட்டுநர் ஸ்ரீதர் தலைமறைவாக இருந்த நிலையில் தென்கரை காவல் நிலைய சார்பாய்வாளர் மணிகண்டன் தலைமையிலான காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர் அப்போது ஸ்ரீதர் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது நாராயணிடமிருந்து எடுத்துச் சென்ற பணம் வேறொரு நபரிடம் கொடுத்து வைத்திருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிகிறது 

மேலும் ஸ்ரீதர் மற்றும் நாராயணன் பள்ளி பருவத்தில் இருந்து இரண்டு பேரும் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
Previous Post Next Post