பாய்ந்தடித்த சிறுத்தை
......................................................
தேனி, செப்- 27,
தேனி வனக்கோட்டம், மற்றும் வனச்சரகம், வரட்டாறு, போடி வடக்கு மலை காப்பு காடு அடிவாரம் கைலாசநாதர் கோவில் பகுதி தனியார் தோட்டத்தின் அருகில் வனப்பகுதியில் வனத்துறையின் மூலம் அமைக்கப்பட்ட சோலார் வேலியில் சிறுத்தை ஒன்று சிக்கி உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டது.
சிறுத்தையினை உதவி வனப்பாதுகாவலர் மற்றும் சரக வனப் பணியாளர்களுடன் உயிருடன் மீட்க்கும் பணியில் ஈடுபடும் போது சிறுத்தை சோலார் வேலியில் இருந்து தானாக விடுபட்டு உதவி வனப்பாதுகாவலர் மகேந்திரனை தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டது. காயமடைந்த மகேந்திரன் அரசுமருத்துமனையில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டார்.
சிறுத்தையை மீட்கும் பணியில் தேனி வனச்சரக அலுவலர், தேனி பிரிவு வனவர் மற்றும் வனக்காப்பாளர் வன ஊழியர்கள் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைலாசநாதர் கோவில் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது வனத்துறை வீடியோவில் பதிவு பதிவானது.அதனை தொடர்ந்து வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை சிக்காமலேயே இருந்து வந்த நிலையில் ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் சிறுத்தை நடமாட்டம்
இருப்பதால் பொதுமக்கள் விவசாயிகள் பக்தர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.