பெரியகுளத்தில் சுதந்திர போராட்ட வீரர் இரட்டைமலை சீனிவாசன் நினைவு தினம் அனுசரிப்பு
தேனி, செப்.19-
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் இரட்டைமலை சீனிவாசன் 77வது நினைவு தினத்தையொட்டி,
தாமரைக்குளம் காந்திநகர், தென்கரை, மேல்மங்கலம் ஆகிய பகுதிகளில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன், வீரவணக்கம் முழக்கமிட்டனர். நிகழ்வில், தேனி பாராளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன், ஒன்றிய செயலாளர் ஆண்டி, சட்டமன்ற தொகுதி துணைச் செயலாளர் ஆண்டவர், நகரச் செயலாளர் ஜோதி முருகன், நகர்மன்ற துணைத் தலைவர் பிரேம்குமார், கவுன்சிலர் கோமதி ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் முத்துச்சாமி, கார்த்திக், பாலமுருகன், திருமா சேகர், பிரபாகரன், கண்ணன், ராம்ஜி, ராமர், லட்சுமணன், சென்றாயன், ஆறுமுகம், காமாட்சி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.