பெரியகுளம் அருள்மிகு பால சுப்பிரமணியர் கோவிலில் பிரதமர் நரேந்திரமோடி பிறந்த நாளினை முன்னிட்டு பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் சிறப்பு பூஜை மற்றும் இனிப்புகள், உணவு வழங்கல்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி தேனி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர்கள் சன்னாசி பாபு, அழகர்சாமி, பிரபாகரன் ஆகியோர் ஏற்பாட்டில் மாநில துணைத் தலைவர் ராஜேந்திர குமார், மாவட்ட தலைவர் முருகன், மேற்பார்வையாளர் லோகநாதன், கணேஷ் குமார் ஆகியோர் தலைமையில் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர்கள் பாலுமகேந்திரா, கார்த்திக், பாலமுருகன்,பாலகிருஷ்ணன் முன்னிலையில் பெரியகுளம் பால சுப்பிரமணியர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்பு கோவில் அருகில் உள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் உணவு வழங்கப்பட்டது. இதில் வழக்கறிஞர்கள் ஜீவா, ராகுல்,புதியவன், முத்துப்பாண்டி, கண்ணன்,இளங்கோவன், விஜயகுமார் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.