மதுரை மாவட்டம் ஐக்கிய விவசாயிகள் முன்னணி (எஸ் கே எம்) சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

மதுரை மாவட்டம் ஐக்கிய விவசாயிகள் முன்னணி (எஸ் கே எம்) சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்


மதுரை - தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு (SKM) சார்பில், மாநிலம் முழுவதும் தெருமுனை கூட்டத்தின் பிரச்சாரம் மதுரை மாவட்டத்தில் உள்ள கப்பலூர், திருப்பரங்குன்றம், சமயநல்லூர் மற்றும் சோழவந்தான் பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விவசாயிகளின் 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே, ஏ.ஐ.கே.எஸ் திருப்பரங்குன்றம் தாலுகா செயலர் மகாமுனி தலைமையில் புதன்கிழமை செப் 21 -ம் தேதியன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் (எஸ்.கே.எம்) விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தனம், ஏ.ஐ.கே.எஸ் மாவட்ட தலைவர் ரவிவர்மா, ஏ.ஐ.கே.எஸ் திருப்பரங்குன்றம் தலைவர் பிச்சை, புரட்சிகர இளைஞர் முன்னணி குமரன், சி.பி.ஐ மாவட்ட குழு உறுப்பினர் ஜெகநேசன், இந்திய மாதர் தேசிய சம்மேளனம் புறநகர் மாவட்டச் செயலாளர் நாகஜோதி, அ.இ.வி.மகாசபை மா.தலைவர் பகத்சிங், ஏ.ஐ.கே.எஸ் மாதர் சங்கம் நிவேதா, பகுஜன சமாஜ் கட்சி வி.ச.மா தலைவர் துரைப்பாண்டியன், அ.இ.வி.ச தாலுகா செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.‌ மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் முத்துவேல் விவசாயிகளின் 8 அம்ச கோரிக்கைகளையும், கூத்தியார்குண்டு கண்மாயில் அத்து மீறி கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, முழுமையாக தண்ணீரை தேக்கிட தமிழக அரசை வலியுறுத்தியும், ஒன்றிய மோடி அரசின் விவசாயிகளுக்கு விரோதமான கொள்கைகளை திரும்ப பெற வலியுறுத்தியும், திருப்பரங்குன்றம் பகுதிகளில் உள்ள கண்மாய்கள், வாய்க்கால்கள், ஓடைகளில் தூர் வாரும் பணி குடிமராமத்துப்பணி, வருடாந்திர மராமத்து பணிகளில் தமிழகம் முழுவதும் நடந்த பணிகளில் ரூ 4,000 ஆயிரம் கோடி மெகா ஊழல் நடந்ததையும், இந்த ஊழல் செய்த மதுரை மாவட்ட முன்னாள் தலைமை பொறியாளர் சுகுமாரை கைது செய்து உரிய விசாரணை செய்ய தமிழக அரசை வலியுறுத்தி விளக்கிப் பேசினார். இறுதியாக ஏ.ஐ.கே.எஸ் நீதி நன்றியுரை கூறினார்.

நிருபர்
பாண்டியன்
மதுரை
Previous Post Next Post