மதுரை ஒத்தக்கடை பழைய சிவலிங்கம் தியேட்டர் எதிரே அண்ணாநகர் குடியிருப்பில் சாலை ஓரத்தில் அந்தப் பகுதி முழுவதும் நீண்ட குழிகள் தோண்டப்பட்டுள்ளது மழைநீர் வடிந்து கண்மாய்க்கு செல்வதற்காக அந்த குழிகள் தோண்டப்பட்டதாக கூறப்படுகிறது. தோண்டப்பட்டுள்ள பள்ளத்தால் வீட்டின் முன்புறம் பல வீடுகள் சேதம் அடைந்தது.

மதுரை ஒத்தக்கடை பழைய சிவலிங்கம் தியேட்டர் எதிரே அண்ணாநகர் குடியிருப்பில் சாலை ஓரத்தில் அந்தப் பகுதி முழுவதும் நீண்ட குழிகள் தோண்டப்பட்டுள்ளது மழைநீர் வடிந்து கண்மாய்க்கு செல்வதற்காக அந்த குழிகள் தோண்டப்பட்டதாக கூறப்படுகிறது.   தோண்டப்பட்டுள்ள பள்ளத்தால் வீட்டின் முன்புறம் பல வீடுகள் சேதம் அடைந்தது. 

இதனால் அங்கு குடியிருக்கும் பொதுமக்கள் சாலைக்கு வருவதற்கே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்தனர். குடியிருப்பு பகுதியில் இருந்து சாலைக்கு வருவதற்கு அந்த பள்ளத்தை தாண்டி தான் வர வேண்டும் அப்படி வரும்போது பலபேர் நிலை தடுமாறி  விழுந்து உள்ளனர். இந்நிலையில் தோண்டப்பட்ட குழியில் மழை பெய்து தண்ணீர் இருந்ததால் மின்சார போஸ்ட் கம்பம்  அங்கிருந்த வீட்டில்  லேசாக சாய்ந்தது அதனால் அந்த அந்த வீடு முழுவதும் மின்சாரம் தாக்கி உள்ளது இதனால் பொதுமக்கள் ஆவேசம் அடைந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர் அதனால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அந்த இடமே பரபரப்பாக காணப்படுகிறது. பொதுமக்கள் ஆவேசம் அடைந்து மறியலில் ஈடுபட்டனர் தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் அவர்களை சமாதானப்படுத்தினர் பின்பு தகவல் கொடுத்ததன் பேரில் உடனே ஜேசிபி இயந்திரம் கொண்டு வந்து போஸ் கம்பத்தை தூக்கி நிறுத்தி சரி செய்யும் பணி நடைபெற்று வருகின்றன.
Previous Post Next Post