தேனி மாவட்டம் பெரியகுளம் வராக நதி , பெரியகுளம் தலைமை அரசு மருத்துவமனை, நகராட்சி 10ம் பகுதி நடுநிலைப் பள்ளியில், தேசிய பேரிடர் மீட்பு படையின் மூலம் ஒத்திகை பயிற்சி பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் சிந்து தலைமையில் நடைபெற்றது

பெரியகுளத்தில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி                        தேனி, செப்.2-            தேனி மாவட்டம் பெரியகுளம் வராக நதி , பெரியகுளம் தலைமை அரசு மருத்துவமனை, நகராட்சி 10ம் பகுதி நடுநிலைப் பள்ளியில், தேசிய பேரிடர் மீட்பு படையின் மூலம் ஒத்திகை பயிற்சி பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் சிந்து தலைமையில் நடைபெற்றது. இந்த ஒத்திகை பயிற்சியின் போது, வெள்ள பாதிப்பு காலங்களில் நல்ல நேரில் சிக்கி அவர்களை மீட்பது குறித்தும் அவசர காலங்களில் பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்தும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இந்த நிகழ்வில், வட்டாட்சியர் ராணி, பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் புனிதன், வருவாய் ஆய்வாளர் செல்வி, கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கமுத்து, அகிலன் குமார், தீயணைப்பு நிலைய அலுவலர் அழகர்சாமி பொதுப்பணித்துறை அதிகாரிகள் மின்வாரியத் துறை அதிகாரிகள் என பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர் .
Previous Post Next Post