திமுக கோஷ்டி மோதலில் அடி
உதை வாங்கிய மேலாளர்
அரக்கோணம் சட்டமன்ற தொகுதி, அரக்கோணம் ஒன்றியம் பிடிஓ அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக டெண்டர் விடும் விவகாரத்தில் திமுகவினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) ஜெயவேலு என்பவரை அரக்கோணம் திமுக மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் லட்சுமிகாந்தன் என்பவர் சராமரியாக தாக்கிய சம்பவம்
செய்தித்தாள்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது அரக்கோணம் ஒன்றியத்தில் திமுக கட்சி வளர்ச்சி மற்றும் நிர்வாகத் திறனுக்காக மேற்கு, கிழக்கு, மத்தியம் என்று மூன்று ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டு கிழக்கு ஒன்றிய செயலாளராக வழக்கறிஞர் சௌந்தரராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளராக தமிழ்ச்செல்வன், மத்திய ஒன்றிய செயலாளராக பசுபதி ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 3 ஒன்றிய செயலாளர்களும் எப்படியாகிலும் சேர்மன் பதவியை பிடித்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக செயல்பட்டு வந்ததாக தெரிகிறது சேர்மன் பதவிக்கு மும்முனை போட்டி நிலவி இருக்கிறது இந்த நிலையில் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான ஆர். காந்தியின் முழு சப்போர்ட் மேற்கு ஒன்றிய செயலாளர் சௌந்தரராஜனுக்கு இருந்ததால வேறு வழியில்லாமல் ஒருமனதாக சௌந்தரராஜன் மனைவி நிர்மலா சௌந்தரராஜனை ஒன்றிய குழுத் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர்
இதனால சௌந்தரராஜன் மீது வெறுப்பும் காழ்புணர்ச்சியும் அதிகமாகி ஒன்றிய செயலாளர்களுக்குள்ளே முனுமுனுப்பு அதிகமாகியிருக்கிறது இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதிக்கு முன்பாக 15வது நிதி நிலைக்குழு மானியம் ஒன்றியக் குழுக் கூட்டம் நடைபெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது
ஒன்றிய கவுன்சிலர் களுக்கான வேலை வழங்கும் மத்திய அரசு திட்டத்தில் ஒரு கோடி ரூபாய் டெண்டரை ஒன்றியக்குழு பெருந்தலைவர் நிர்மலா சௌந்தர்ராஜன் டெண்டர் விடாமல் நிறுத்தி வைத்துள்ளார் ஏற்கனவே கோபமும் காய் புணர்ச்சியும் கொண்ட ஒன்றிய நிர்வாகிகளுக்கு
மேலும் கோபம் அதிகமாகி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வனின் ஆதரவாளரான ஒன்றிய துணைச் செயலாளர் லட்சுமிகாந்தன் கடந்த 19ஆம் தேதி அன்று பிடிஓ அலுவலகத்தில் உள்ளே புகுந்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம் ) ஜெயவேலுவுடன் ஏன் டெண்டரை விடவில்லை, யார்? சொல்லி டெண்டரை நிறுத்தி வைத்து உள்ளீர்கள் உடனடியாக டெண்டர்
விட்டாகவேண்டும் நாங்கள் சொல்லும் ஆளுக்குதான் வேலை கொடுக்க வேண்டும் என்று வாக்குவாதம் செய்து சண்டை பிடித்துள்ளார் இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்ற மேலும் கோபமான லஷ்மி காந்தன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயவேலுவை சரமாரியாக தாக்கி அடித்துள்ளார்,கிழக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வன் தூண்டுதலின்பேரில் லட்சுமிகாந்தன் இந்த செயலை செய்திருக்கிறார் என்று கட்சி உடன்பிரப்புகள் தெரிவிக்கின்றனர் இதனால மன உலைச்சலான ஜெயவேலு அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் ஒன்றிய துணை செயலாளர் லட்சுமிகாந்தன் மீது புகார் அளித்தார் சம்பவம் அறிந்த தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை சங்கம், அரக்கோணம் பிடிஓ அலுவலகம் முன்பு திமுக ஒன்றிய துணைச் செயலாளர் லட்சுமிகாந்தன் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்
அதனைத் தொடர்ந்து அதிமுக சார்பில் பிடிஓ அலுவலகத்திற்கு முன்பாக அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மேலாளர் ஜெயவேலுவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர் அரசு ஊழியரை தாக்கிய திமுக நிர்வாகத்தை கண்டித்து கண்டனம் தெரிவித்தனர் மேலும் அதனைத் தொடர்ந்து பாமக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் துணை செயலாளர் ராமசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் அரசு ஊழியரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர்
இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான
சு.ரவியை தொடர்பு கொண்டு கருத்து கேட்டபோது அவர் கூறியதாவது திமுக ஜெயித்ததற்கு காரணமே அரசு ஊழியர்கள் தான் அரசு ஊழியர்கள் மட்டும் ஓட்டு போடுவதற்கு தீர்மானம் எடுக்கவில்லை என்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி தருகிறோம், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருகிறோம் என்று சொன்னதால் அரசு ஊழியர்கள் தீர்மானம் எடுத்து பாவம் வாக்களித்து விட்டார்கள் இல்லையென்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை கூட்டி தரவில்லை என்றாலும் பரவாயில்லை அரசு ஊழியர்களை செயல்படவே விட மாட்டுகிறார்கள், எங்கு சென்றாலும் அராஜகம், அரசு அதிகாரிகளை மிரட்டுவது சட்டத்தை மீறி வேலை செய்யச் சொல்கிறார்கள், அரசு அதிகாரிகள் மறுக்கின்ற போது மிரட்டுகிறார்கள், அடிக்கிறார்கள் எங்கு பார்த்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் தான் நடந்து கொண்டிருக்கிறது அதிகாரிகளிடத்தில் கேட்டால் எங்களால் வேலையே செய்ய முடியவில்லை, திமுக காரர்களுக்கு கட்டுப்பாடே இல்லை, என்கின்றனர் அதிமுக ஆட்சியில் மாவட்டச் செயலாளர் சொல்லிவிட்டார் என்றாள் யாரும் எந்த அதிகாரிகளிடமும் தகராறு
செய்ய மாட்டார்கள் , சென்ற ஆட்சி அமைதிப் பூங்காவாக இருந்தது அரசு அதிகாரிகள் சொல்லுகிறார்கள் பத்து வருட காலமாக நாங்கள் சுதந்திரமாக செயல்பட்டு கொண்டு இருந்தோம், இந்த ஆட்சியில் யார்? இடத்தில்தான் கட்சி இருக்கிறது என்றே! தெரியவில்லை தலா, தலா பெருதனமா இருக்கிறது
இந்த மாவட்டத்தில் அமைச்சரும் திமுக மாவட்ட செயலாளராகவும் ஆர்.காந்தி இருக்கிறார்
அவருடைய கட்டுப்பாட்டில் கூட அரக்கோணத்தில் யாருமில்லை என்றார் திமுக காரர்களுக்கு ஒரே குறிக்கோள் எப்படியாகிலும் பணம் சம்பாதிக்க வேண்டும்
என்பதற்காக எல்லாரையும் மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்
காய்ச்சல் காரன் கஞ்சிக்கு அலைவது போல, திமுக காரன் பணம் ,பணம் என்று அலைகிறார்கள் என்றார் இவ்வாறு அவர் பேசினார்
அதனைத் தொடர்ந்து பாமக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சரவணனிடம் தொடர்புகொண்டு கருத்து கேட்டபோது அவர் பேசியதாவது நான் ஒரு கடையில் பிஸியாக இருக்கிறேன் என்னால் இப்பொழுது அதை குறித்து
பேச முடியாது 10 மணிக்கு மேல் பேசுகிறேன் என்று சொல்லி தொடர்பை துண்டித்து விட்டார் அதன்பிறகு தொடர்புக்கு வரவே இல்லை
மேலும் இந்த சம்பவம் குறித்து பிடிஓ குமாரிடம் தொடர்பு கொண்டு பேசிய போது அவர் கூறியதாவது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயவேலுவை திமுக ஒன்றிய துணைச் செயலாளர் லட்சுமிகாந்தன் தாக்கி விட்டார் இது சம்பந்தமாக அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர் போலீஸ் தரப்பில் நடவடிக்கை எடுப்பதாக கூறி இருக்கின்றனர் என்றார் இவ்வாறு அவர் கூறினார்
அரக்கோணம் திமுக பொருத்தவரையில் மேற்கு, கிழக்கு, மத்தியம் ,நகரம் என்று பொறுப்பாளர்கள் திமுக போர்வையில் இருந்தாலும் உட்கட்சிப் பூசலும், கோஷ்டி மோதல்களும் எப்பொழுதும் போல் நடந்து கொண்டே தான் இருக்கின்றன ஒற்றுமை இல்லை, கட்சி வளர்ச்சியும் இல்லை , அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியில் நின்று வெற்றி பெறுவதற்கு ஓட்டு வாங்கியும் இல்லை, என்று கட்சி உடன்பிறப்புகளின் புலம்பலாய் இருக்கிறது போலீஸ்காரன் பிள்ளை திருடன், வாத்தியார் பிள்ளை மக்கு என்று சொல்லும்
பழமொழி போல ஆளுமை திறன் கொண்ட நல்ல தலைவனை திமுக கட்சி பெற்றிருந்தும், கட்சிக்கும் நல்லாட்சிக்கும் பங்கம் விளைவிக்கும் ஒன்றிய துணைச் செயலாளர் லட்சுமிகாந்தன் போல சில புல்லுருவிகள் கட்சிக்குள் ஊடுருவி இருக்கத்தான் செய்கிறார்கள் தளபதியாரின் கண்ணோட்டத்திற்கு இது செல்லுமா? கட்சிக்குள் ஊடுருவியிருக்கும் புல்லுருவிகள் கலை எடுக்க படுவார்களா? அமைச்சர்
ஆர்.காந்தி இதனை கண்டு கொள்வாரா? தளபதியாரின் நடவடிக்கை என்னவாயிருக்கும் பொருத்திருந்து பார்ப்போம்!