புதிய வகை செம்பருத்தி பலா அறிமுகம் விளக்கம் அளிக்கிறார் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் பிரேம்குமார்

புதிய வகை செம்பருத்தி பலா அறிமுகம் விளக்கம் அளிக்கிறார் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் பிரேம்குமார் 
ராணிப்பேட்டை மாவட்
டம் திமிரி வட்டம் மழை
யூர் கிராமத்தைச் சேர்ந்த
வர் பிரேம்குமார். விவசாய
குடும்பத்தைச் சேர்ந்த
பிரேம்குமார் ஏரோஸ்
பேஸ் இன்ஜினியரிங்
முடித்து   பெங்களூரிலுள்ள  இந்திய  ராணுவத்
தின் டிஆர்டிஓ ஆராய்ச்சி
மையத்தில் ஆராய்ச்சியாள
ராகவும்,  மற்றும் பல்வேறு விமான கட்டுமான நிறுவனங்களிலும் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.  உழவுத் தொழிலின்
மீது ஆர்வம் கொண்ட
பிரேம்குமார் நாளடைவில்
தன்னை  விவசாயத்தொழிலில் ஈடுபடுத்
திக் கொண்டார்.
இத்தகைய சூழலில்  அமெரிக்கா, ஐரோப்பா , மலேஷியா, வியட்நாம், தாய்லாந்து போன்ற பல்வேறு நாடுகளில்  பலாமரத்தைக் குறித்தும், அவற்றின் மகசூல், சுவை உற்பத்தித் திறன் விவசாயிகளுக்கு அதனால் ஏற்படும் லாபத்தைக் குறித்தும் நன்றாக தெரிந்து கொண்டார். 

செம்பருத்தி பலா வகை  பற்றியும், மலேஷியா, தாய்லாந்து, கர்நாடகவில்  உள்ள தும்கூர், டுபுகெரே, ஷிமோகா மற்றும் கேரளா, மாநிலங்களில் உள்ள சிவப்பு ரக பலா மரங்களை ஆராய்ச்சி செய்து, சிறந்த வகை பலா மரத்தை  அறிமுகம் செய்து 
 விவசாயிகள் நலம்பெறும் வகையில் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு 15 வருடங்களாக  பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்தார்.  இந்த நிலையில்

திருவண்ணாமலை மாவட்டம் 
ஜவ்வாதுமலையி ல் உள்ள
நண்பர்களும் விவசாய மக்களும் பயன்பெறும் வகையில்  செம்பருத்தி வகை பலா அறிமுகம் செய்துவைத்து பலா மரம் விவசாயம் செய்ய உதவி செய்தார்.

தொடர்ந்து  செம்பருத்தி வகை பலா
மரக்கன்றுகளை உற்பத்தி
செய்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு அறிமுகம் செய்து வருகிறார.
இந்த நிலையில், கடந்த 
07.07.22 அன்று  செம்பருத்தி வகை பலா மரக்கன்றுகளை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர்

பாஸ்கர பாண்டியனிடம்
வழங்கி இந்த பலாப்பழம்
குறித்து விளக்கினார்.
அவரை கலெக்டர் பாராட்டினார். இதுகுறித்து பிரேம்
குமார் கூறியதாவது:
செம்பருத்தி பலா
சிவப்பு நிறத்தில் ஒரே அளவில் மிகவும் சுவையான
சுளைகளைக்கொண்டிருக்கும். சிறந்த பலா, தேன் இட்ட பணியாரம் போல இனிப்பாக இருக்கும் 

கொட்டைகள்
சிறியதாகவும், சுளைகளின்
சதைபகுதி அதிகமாகவும் இருக்கும், 1.5 கிலோ முதல், 5, 10, 15, 20
கிலோவரை எடை இருக்கும் என்றார்  இந்த பலாப்பழத்தை மக்கள் 
அதிகள
வில் விரும்பி சாப்பிடும்
பழக்கம் உருவாகியுள்ளது.
பலாக்காயை தூளாக்கி சாப்பிடுவதால் 
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வருகிறது. பிஞ்சு பலாவை அசைவ உணவிற்கு மாறாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் பழக்கம் அதிகரித்து உள்ளது. 
பலாப்பழத்தின்
தோலிலிருந்து எடுக்கப்படும் பெக்டின் என்ற
ஆசிட் ஜாம் தயாரிப்பிற்கு
பயன்படுகிறது. 

மஞ்சள்
நிற பலாச்சுளை ஒன்று
5க்கு விற்றால்  சிவப்பு நிற
பலாச்சுளை 10 முதல் 15
வரை விற்பனை செய்யலாம். இதனால் விவசாயிகளுக்கு அதிக லாபம்
கிடைக்கும். மாந்தோட்
டம் வைப்பது போல
பலாத்தோட்டத்தை
அமைக்கலாம். ஒரு ஏக்கரில் 70 முதல் 200 பலா மரக்கன்று
களை நடலாம். 2 முதல் 3
ஆண்டுகளில் பலாப்பழம்
விளைந்துவிடும்.  குரங்கு, மற்றும் மற்ற விலங்குகளின் தொல்லை இல்லாதது, மற்றும் அதிக வெப்பத்தை தாங்ககூடிய மரம்.

ஒட்டு
ரகங்களை நல்ல முறையில்
தேர்வு செய்து நட வேண்டும்.
திருவண்ணாமலை,
வேலூர், திருப்பத்தூர்,
ராணிப்பேட்டை மற்றும்
விழுப்புரம் மாவட்டங்க
ளில் செம்பருத்தி பலா கன்
றுகளை விவசாயிகளுக்கு அறிமுகம் செய்து மற்றும் உற்பத்தி செய்து
வருகிறேன். நண்பர்கள்
உதவியுடன் இதுவரை
1500க்கும் மேற்பட்ட செம்
பருத்தி பலா கன்றுகளை
விவசாயிகளுக்கு வழங்கி
யுள்ளேன் என்றார் (ஆர்வமுள்ள  விவசாயிகள்  இவரை தொடர்புகொள்ள மொபைல்: 8095097447).
Previous Post Next Post