ஏழைகளின் உயிரோடு விளையாடும் மருத்துவர் ஐஸ்வர்யா....பெரியகுளத்தில் அவல நிலை
..........................................................
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை 100 ஆண்டுகள் பழமையானது. இந்த மருத்துவமனையில் தினம்தோறும் பல நூறுக்கும் மேற்பட்ட கிராம மக்களும்-ஏழை எளிய மக்கள் மருத்துவம் பார்க்கும் மருத்துவமனையாக இருந்து வந்தது
நாளடவில் இந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களும்- செவிலியர்களும் தங்களது பணியின் மகத்துவத்தை மறந்து ஏனோ கடமைக்காக மருத்துவமனைக்கு வந்து செல்வது வழக்கமாகிவிட்டது
பழமைவாய்ந்த இந்த பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனை சில மருத்துவர்- செலியர்களால் பாழாய் போய்க்கொண்டிருக்கிறது
குறிப்பாக மருத்துவர்கள் சரியான நேரத்துக்கு பணிக்கு வருவதில்லை. செவியர்கள் தனக்கு வேண்டியவர்கள் வந்தால் சிறப்பாக கவனிப்பதும். இல்லாத ஏழை மக்கள் வந்தால் வெறுப்பாக பேசுவதுமாகவே தொடர்கிறது.
இதை எல்லாம் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய மருத்துவ பணி இணை இயக்குனராக இருக்கும் பெண் அதிகாரி எதையும் கண்டுகொள்வதில்லை
MP ரவிந்தர்நாத் ஆய்வு
................................................
தொடர்ந்து இந்த மருத்துவமனையின் சீர்கேட்டை பற்றிய புகார் பொதுமக்களிடம் இருந்து வந்ததைத் தொடர்ந்து தேனி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு OP.ரவீந்தர்நாத் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் ஆய்வு செய்தும் குறைகளை சுட்டிகாட்டினார்கள் அதனை சரிசெய்து சரியாக பணியாற்றுவார்கள் என எதிர்பார்ப்புக்கு பெருத்த ஏமாற்றமே நிலவியது
3 நபர்கள் மரணம்
........................................
அதேபோல் 9-6 - 2022ம் தேதி மதியம் 3 மணிக்கு வடகரை பகுதியைச் சேர்ந்த பெண் கடுமையான வயிற்றுவலியால் துடித்துக்கொண்டு மருத்துவ சிகிச்சைக்காக சென்று ஒரு மணிநேரமாகியும் பணியில் இருந்த மணநல மருத்துவர் ஐஸ்வர்யா மற்றும் இரண்டு செவிலியர்கள் உட்பட யாரும் கவனிக்காததால் கடுமையான வயிற்றுவலியோடு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று மருத்துவம் பார்த்துள்ளனர். அதேநேரத்தில் கைலாசபட்டி அருகே உள்ள குளற்றில் மூழ்கி பன்னீர் செல்வம் என்பவரும் 3 சிறுவர்களும் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக கொண்டுவந்தனா. உடனடியாக மருத்துவம் பார்க்க வேண்டிய மருத்துவர் ஐஸ்வர்யா. காவல்துறையினர் கொண்டுவந்த 6 கைதிகளுக்கு சான்று எழுதிக் கொண்டிருக்கும் அவநிலை அரங்கேறி உள்ளது இதில் 3 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தது வேதனையான சம்பவம்
இந்த பணியில் உள்ள செவிலியர் மற்றும் மருத்துவரின் அஜாக்கிரதையைப் பற்றி இணை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பாளரிடம் நோயாளிகள் முறையிட்டும் எந்தவிதமான நடவடிக்கை இல்லை
கூண்டோடு மாற்றம் தேவை
...............................................
பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் மனிதாபிமானத்துடன் பணியாற்றும் சில மருத்துவர்களை தவிர மருத்துவர்- செவிலியர்-பணியாளர்கள் என அனைவரையும் கூண்டோடு மாற்றி மக்களுக்கு மகத்தான தொண்டாற்றும் மருத்துவர்களையும் - செவிலியர்களையும் நியமிக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.