சாலையை வாடகை விட்டு வரி வசூல் செய்யும் வாலாஜா நகராட்சி,போக்குவரத்து நெரிசல் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

சாலையை வாடகை விட்டு வரி வசூல் செய்யும் வாலாஜா நகராட்சி,போக்குவரத்து நெரிசல் 
சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு 
ராணிப்பேட்டை மாவட்டம்
18.06.22

 வாலாஜா நகராட்சி சோளிங்கர் சாலையில்  பேருந்து நிலையத்திலிருந்து சார்பதிவாளர் அலுவலகம் வரையிலும் பூக்கடை,  இளநீர்வியாபாரம், காய்கறி கடை, மீன் கடை, கரும்பு ஜூஸ் கடை, ஹோட்டல் சிற்றுண்டிகள், குளிர்பான கடைகள் இப்படி  கடைகளை வைத்து  சிறு குறு வியாபாரிகள்  சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வருகின்றனர்

 இந்த கடைகளுக்கு   வந்து செல்லும்  பொதுமக்கள் கார் மற்றும்  இருசக்கர வாகனங்களை சாலையிலே  நிறுத்தி பொருட்களை வாங்குவதால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர்  இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மணிக்கணக்கில் வாகனங்கள் சாலையில் மெல்ல மெல்ல நகர்ந்து   தாமதமாக செல்கின்றன மேலும்   காலையிலும் மாலையிலும்  பள்ளிக்குச் செல்லும்

 மாணவ, மாணவியர்கள் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் பள்ளி வாகனங்கள்  போக்குவரத்து நெரிசல் காரணமாக தாமதமாக செல்லும்  அவல நிலை ஏற்பட்டுள்ளது   போக்குவரத்து நெரிசல் காரணமாக அவ்வப்போது  வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சில நேரங்களில்  ஆபத்துகளும், விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன

 மேலும்  பேராபத்துகள் ஏற்பட ஆதிக வாய்ப்புள்ளதாகவும்  கூறப்படுகிறது  இதுகுறித்து அங்குள்ள சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்த போது  சோளிங்கர் சாலையில் குறிப்பாக அஞ்சல் அலுவலகம் முன்பு  இளநீர்,  காய்கறி வியாபாரம் செய்யும் வியாபாரிகள்  காலையிலும், மாலையிலும் சாலையை ஆக்கிரமித்து  வியாபாரம் செய்து வருகின்றனர் அஞ்சலகமே வியாபார ஸ்தலமாக மாறி இருக்கிறது தேங்காய் மட்டைகளை வெட்டி கழிவுநீர் கால்வாயில் நிரப்பி சமீபத்தில் பெய்த கனமழையால் மழை மற்றும் கழிவுநீர்தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது   என்றனர்  மேலும் அவர்கள் பேசியபோது 

 இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் தாமதமாக செல்லும் அவலநிலை ஏற்படுகிறது  விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறினர்  வியாபாரிகளிடம் கேட்டால்  சாலையை ஆக்கிரமித்து இப்படி வியாபாரம் செய்கிறீர்களே! போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மணிக்கணக்கில் வாகனங்கள் நின்று தாமதமாக   செல்கிறது

 இந்த இடத்தில் வியாபாரம் செய்ய 
 யார்?  அனுமதித்தது என்று கேட்ட போது    நகராட்சி நிர்வாகம்தான் அனுமதித்தது இல்லையென்றால் வியாபாரம் செய்ய முடியுமா ? இந்த இடங்களில் கடை நடத்தி கொள்வதற்கு எங்களிடம் வரி வசூல் செய்கின்றனர்   நாங்கள் இன்றைக்கு நேற்று அல்ல வருடக்கணக்கில் சாலையில் வியாபாரம் செய்து வருகிறோம் 

 ஒவ்வொரு நாளும் நகராட்சி நிர்வாகம் எங்களிடம் வரி வசூல் செய்கிறது முடிந்தால் ரசீதி கொடுப்பார்கள் இல்லை என்றால் பணம் மட்டும் வாங்கி செல்வார்கள் நாங்கள் ஒன்றும் சும்மா! விபாரம் செய்யவில்லை பணம் கட்டி தான் வியாபாரம் செய்கிறோம்
 என்று சொல்வதாக கூறுகின்றனர் 

 சாலையையே! வாடகை வீட்டு வரி வசூல் செய்யும் அவலம்  வாலாஜா நகராட்சியில் தான் அரங்கேறி வருவதாக சமூக ஆர்வலர்கள்  குற்றம் சாட்டினர்  மேலும் அவர்கள் பேசுகையில்  சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்யும்  கடைகளை அகற்றி  போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள்  சென்றுவர  துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா? துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
 சமூக ஆர்வலர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா? கடவுளுக்கே! வெளிச்சம்!!
Previous Post Next Post