மலைவாழ் மக்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்த வேண்டி - ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு கோரிக்கை

மலைவாழ் மக்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்த வேண்டி  - ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு கோரிக்கை



ஈரோடு மாவட்டம்
சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம்,தலமலை,வழியாக தாளவாடிக்கு இரண்டு  த.நா.அ.போ.க.
பேருந்துகள் மலைவாழ் மக்களின் வசதிக்காக  இயக்கப்படுகின்றன..
இவைகளில் ஒரு பேருந்து பெஜலட்டியிலிருந்து தடசலஹட்டி,இட்டரை வரை தனிப்பட்ட கிளைச்சாலையில் அடர்ந்த  வனப்பகுதிக்குள் அமைந்துள்ள குறுகலான வளைவுகளும்,ஏற்றங்களும் கொண்ட மலைச்சாலையில் சென்று வருகிறது.வழக்கம்போல கடந்த 19-5-2022 அன்று காலையில் இயக்கப்பட்ட  த.நா.33 /நா 2911 பேருந்து  சேற்றுமண்ணில் சிக்குண்டு டயர்கள் வழுக்கி பக்கத்திலுள்ள ஆழமான பள்ளத்தில் விழும்நிலைக்கு இழுத்துச் செல்லப்பட்டு,பேருந்தினுள் இருந்த பயணிகள் அலறியடித்து கூச்சலிட்டநிலையில்  ஓட்டுனரின் சாமார்த்தியத்தால் கட்டுப்படுத்தி நிறுத்தப்பட்டுள்ளது.தகவலறிந்து  அந்தப் பேருந்தில் பணிபுரிந்த ஓட்டுனர் C.பரமேஸ்வரன் அவர்களைத் தொடர்புகொண்டு விபரம் கேட்டபோது ஓட்டுனர் அவர் கூறியதாவது....... "பெஜலட்டியிலிருந்து இட்டரை வரை செல்லும் சாலை கான்கிரீட்சாலையாக போடப்பட்டிருந்ததாகவும், மழைகாரணமாக பழுதடைந்து பத்தாண்டுகளுக்கு மேலாகியும் பராமரிப்பே இல்லாமல் மிகமோசமாக பழுதடைந்துள்ள  அந்தச்சாலையில்  மலைவாழ்மக்களின் வசதிக்காக நிர்வாக உத்தரவுப்படி மிகுந்த சிரமங்களுக்கிடையே பேருந்தை இயக்குவதாக கூறினார்.
அதேவேளை பெஜலட்டி - இட்டரை  வனச்சாலையைப் பராமரிக்கவேண்டிய நெடுஞ்சாலைத் துறை  சிறிதும் அக்கறையில்லாமல் புதுப்பிக்காமலும்,பழுது
நீக்காமலும் அலட்சியப்படுத்தியுள்ளதால் இட்டரைவரை செல்லவேண்டிய பேருந்து இடையிலுள்ள தடசலஹட்டிவரை மட்டுமே சென்று வருகிறது.
மழைக்காலங்களிலும்
,திம்பம் மலைச்சாலை வழி
தடை ஏற்பட்டு காலதாமதமான நாட்களிலும் மேற்கண்ட ஊர்களுக்கு பேருந்து இயக்கமுடிவதில்லை.
கடந்த 2018 ஆம் ஆண்டில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் தானே நேரில் மனு அளித்து விபரமளித்துள்ளதாகவும் கூறினார்.
அதன்பின்னர்  தரமில்லாத வழுக்கு மண்ணைப் போட்டு பெயரளவுக்கு சாலைப்பழுது பார்ப்பதால், புலி,சிறுத்தை,யானை,காட்டெருமை,கரடி,செந்நாய்கூட்டம் நிறைந்த மேற்குறிப்பிட்ட வனச்சாலையில்  இன்றுவரை பயணிகளுக்கு ஆபத்தான நிலையில்  பாதுகாப்பில்லாமல் பேருந்து இயக்கப்படவேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது .இதனால் அடிக்கடி பேருந்தின் டயர்கள் சேதமடைவதாலும்,ஸ்பிரிங் பிளேட்களும்  ஸ்பிரிங் பெட்களும் உடைவதாலும் பேருந்தை மிகவும் தாமதமாக இயக்கவேண்டியுள்ளது என்றார்.
மக்களுக்கு சேவையாற்றும் பொறுப்பு த.நா.அ.போ.கழகத்திற்கு மட்டும் இருந்தால் போதுமானதில்லை.பயணிகள் பேருந்து இயக்கப்படும் சாலையைப் பராமரிக்கும் நெடுஞ்சாலைத்துறைக்கும்,கட்டுப்படுத்தும் மற்ற அரசுத்துறைகளுக்கும் பொறுப்பு உள்ளது என்பதை உணர்ந்து கடமையாற்றினால்தான் மக்களுக்கு பாதுகாப்பான சேவை சிறப்பாக செய்யமுடியும்.
பெஜலட்டி, தடசலஹட்டி இட்டரை மலைச்சாலையை இனிமேலாவது ஈரோடு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து  த.நா.போ.கழக அதிகாரிகளும்,நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும்,பேருந்து வசதிமட்டுமே வேண்டும் என மனுஅளிக்கும் சமூக ஆர்வலர்களும் நேரில் சென்று வனச்சாலையை பார்வையிடுவதோடு அவ்வூர் மக்களிடமும் விசாரித்து தன் கடமையை பொறுப்பாக செய்து மக்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டும்.இந்த உண்மையை உயர்திரு.ஈரோடு  மாவட்ட ஆட்சியர் அவர்களின் மேலான கவனத்திற்கு எடுத்துசென்று நடவடிக்கை எடுக்கக் கோரி  மலைப்பகுதி மக்களுக்கு உதவுமாறு கூறினார். 

மக்களின்தேவைக்காக கட்டாயம் பேருந்து இயக்கவேண்டிய சாலை பராமரிப்பில்லாமல் மழை நீரால் அரிக்கப்பட்டு கொண்டும்,குழியுமாக  உள்ளது.பராமரிப்பு 
என்கிற பெயரளவில் அருகிலேயே கிடைக்கும் வழுக்கு மண்ணை ஓரளவு போடப்பட்டுள்ளது.
தற்போதைய மழையால் வழுக்கி பேருந்தின் டயர்களுக்கு பிடிப்பு இல்லாமல் ( பக்கவாட்டில் வலதுபக்கம் சாலையோரமாக மின்கம்பம் உள்ளது.இடதுபக்கம் ஆழமான பள்ளத்தாக்கு உள்ளது.) இழுத்துச் செல்கிறது.இவ்வாறு நான்கு இடங்கள் ஆபத்தாக உள்ளன.திருப்பும் இடம் மிக குறுகலாக உள்ளது.இட்டரை ஊருக்கு சாலையே இல்லாமல் மழைநீர் அரித்துவிட்டதால் பாதியிலேயே திருப்பி வருகிறோம் என்று கூறினார்.இது போன்ற மிகவும் ஆபத்தான சாலைகளை  விரைந்து சீரமைத்து இப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு போக்குவரத்து வசதிகள் சிரமமின்றி பெற 
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்கள் விரைந்து புதிய சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு தகவலறியும் சமூக ஆர்வலர் சங்க ஈரோடு மாவட்ட செயலாளர்
ம.கோபாலகிருஷ்ணன்கோரிக்கையாக உள்ளது.
Previous Post Next Post