இயக்குநர் மற்றும் குழும இயக்குநர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் துறை திருமதி. வே.அமுதவல்லி இஆப., அவர்கள் தலைமையில் இன்று (19.05.2022) ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி இஆப., அவர்கள் முன்னிலையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் கீழ் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனைகள்
குறித்த துறை சார்ந்த அலுவலர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம்) திருமதி.பூங்கோதை உட்பட பலர் உள்ளனர்.