தேனி மாவட்டம் பெரியகுளம் நகர மன்ற கூட்டம் இன்று நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது

தேனி மாவட்டம் பெரியகுளம் நகர மன்ற கூட்டம் இன்று நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது 
இந்த கூட்டத்தில் சொத்து வரி உயர்வு சம்பந்தமாக விவாதம் நடைபெற்றது விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர்மன்ற உறுப்பினர் நகர் மன்றத்தால் உயர்த்தப்படும் சொத்து வரி உயர்வை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் சொத்து வரி உயர்வை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு திமுக நகர மன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் இதற்குப் பின்பு திமுக கூட்டணி கட்சி நகர மன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு சொத்து வரி உயர்வை சம்பந்தப்பட்ட தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது

 இதனை தொடர்ந்து
இந்த கூட்டத்தில் 
சொத்து வரி உயர்வை அனுமதிக்கக் கூடாது என்றும் சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி அதிமுக நகர் மன்ற குழு தலைவர் ஓ. சண்முக சுந்தரம் தலைமையில் வெளிநடப்பு செய்யப்பட்டது
ஓ.சண்முகசுந்தரம் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஆவார்
Previous Post Next Post