தேனி மாவட்டம் பெரியகுளம் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்புதமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும் எனவும்,பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும்,சத்துணவு பணியாளர்கள் அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் எனவும்,காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட கிளை தலைவர் ஜெரால்டு தலைமை தாங்கினார்.வட்ட கிளை செயலாளர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார்.வட்ட கிளை நிர்வாகி சுந்தரம் துவக்க உரையாற்றினார்|கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நீதித்துறை ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் மனோகரன்,மாவட்ட தலைவர் ராமதாஸ்,முன்னாள் மாவட்டத் துணைச் செயலாளர் ஜெயபாண்டி ஆகியோர் பேசினார்கள்.அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தாஜூதீன் நிறைவுரை ஆற்றினார்.வருகை தந்த அனைவருக்கும் வட்ட கிளை பொருளாளர் பவானி ஜீவராஜ் நன்றி உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்
தேனி மாவட்டம் பெரியகுளம் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்புதமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழர் களம் மாத இதழ்
0