போக்குவரத்திற்கு இடையூறு செய்த வாலிபர் கைது

போக்குவரத்திற்கு இடையூறு செய்த வாலிபர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம் 
கலவை அடுத்த அரும்பாக்கம் கிராமம் பஜனை கோயில் தெருவில் வசித்து வரும் தினகரன் என்பவரின் மகன் செந்தூரப் பாண்டியன் வயது 29 என்பவர் நேற்று 
 பகல் சுமார் 1.00 மணிக்கு கலவை காவல் நிலைய உதவி ஆய்வாளர் 
சரவணமூர்த்தி,  சிறப்பு உதவி ஆய்வாளர் ரகுராமன் மற்றும் சங்கர்
ஆகிய போலீஸ்சார் பார்ட்டி சகிதம், சட்ட ஒழுங்கு

 மற்றும் குற்ற தடுப்பு சம்மந்தமாக கலவை காவல்
நிலைய எல்லைக்குட்பட்ட கலவை கூட்ரோடு பஸ் நிறுத்தம் அருகே கண்காணித்துக் கொண்டு போகும்
போது ஒரு நபர் போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் அச்சம். ஏற்படும் வகையில் இந்த சாலையில்
யாரும் நடக்கக்கூடாது,

 சாலையில் எந்த வாகனங்களும் செல்ல கூடாது, என்றும் பேசிக்கொண்டு
இருந்தவர்களை எச்சரித்தும் கேளாமல் தொடர்ந்து சத்தம் போட்டுக்கொண்டே இருந்தார், நின்றிருந்தவரை பிடித்து
விசாரிக்க தன்னுடைய பெயர் செந்தூரபாண்டி, வயது/ 29 த/பெ.தினகரன் பஜனை கோயில்
தெரு அரும்பாக்கம் காலனி, ஆற்காடு தாலுக்கா, இராணிப்பேட்டை மாவட்டம்

 என்று கூறியுள்ளார் எனவே
 போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் அச்சம் ஏற்படும் வகையிலும் மற்றும் இவரை அங்கேயே
விட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால்  கைது செய்தனர் கைது செய்த
விவரத்தை உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தும் உச்சநீதிமன்ற கட்டளைகளை நிறைவேற்றியும்
எதிரியுடன் பகல்

 செந்தூரப்பாண்டி மீது 2,மணிக்கு நிலையம் கலவை காவல் நிலைய குற்ற எண்:91
/2022 U/S 7(1) a CLA Act -2005ன் படி வழக்கு பதிவு செய்து 
 திரேக சோதனை செய்து
நிலைய பாரா வசம் ஒப்புவிக்கப்பட்டது.
இவர்  வெளியில் இருந்தால் மீண்டும்
சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Previous Post Next Post