தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் முதல் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது
இந்த கூட்டத்தின் போது பெரியகுளத்தில் உள்ள 30 வார்டு நகர்மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள் நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த முதல் கூட்டத்தில் ஒவ்வொரு நகர்மன்ற உறுப்பினர்கள் தங்களுடைய வார்டு பகுதியில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி அதை நிவர்த்தி செய்ய கோரிக்கைகளை பதிவு செய்தார்கள்
நகர்மன்ற துணைத் தலைவர் பிரேம்குமார் பேச்சு
.......................................................
பெரியகுளத்தில் அனைத்து பகுதி மக்களுக்கும் அனைத்து விதமான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்றும் தன்னை தேர்வு செய்த மக்களுக்கும் வாய்ப்பு தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களுக்கும் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் .அவர்களுக்கும். திமுகமாவட்ட செயலாளர் தங்க.தமிழ்செல்வன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக பேசினார்
ஓ .சண்முகசுந்தரம் பேச்சு
............................ ..........................
தன்னை தேர்வு செய்வதற்கு வாக்களித்த தனது வார்டு பொதுமக்களுக்கும் முன்னாள் முதல்வர்
ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி அவர்களுக்கும் தேனி நாடாளுமன்ற உறுப்பினர்
ப. ரவிந்திரநாத் அவர்களுக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் நகராட்சி ஆணையாளர் புனிதன் அவர்களுக்கும் நகர்மன்ற தலைவர் திருமதி. சுமிதா சிவக்குமார் ஆகியோருக்குமுதல் நகர்மன்ற கூட்டத்தில் நன்றியினை தெரிவித்துக் கொண்டார் .
அதேபோல் தனது பகுதியில் மக்களுக்கான அடிப்படை வசதிகள் எவ்வித தொய்வும் இன்றியும் சிறப்பாக செய்து தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்
நகர்மன்ற உறுப்பினர் கிஷோர் பானு பேச்சு
....................................................
நகர்பகுதியில் மக்களின் பாதுகாப்பிற்க்காக மக்கள் கூடும் அனைத்து பகுதியிலும் சி.சி டி.வி.கேமராக்களை பொருத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்து பேசினார்
நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் பேச்சு
........................................................
ஒவ்வொரு நகர்மன்ற உறுப்பினர்கள் தங்களுடைய கோரிக்கைகளை மிக கவனமுடன் பரிசீலித்து நிறைவேற்றுவதற்கான அனைத்து பணிகளையும் செய்யப்படும் எனவும் இந்த நகர் மன்றம் மக்களுக்கான நகர் மன்றம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக்கூடிய நகர் மன்றம் என்று மக்கள் பணிகளை சிறப்பாக செய்து தருவது உண்டான அனைத்து முயற்சிகளையும் இந்த மன்றம் எடுக்கும் என பேசினார்.
உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக தந்தாள் அதை சரிசெய்ய உதவியாக இருக்கும் என தெரிவித்தார்