தன் மகனை வெட்ட வந்ததாக சாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்

தன் மகனை வெட்ட வந்ததாக சாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த  சாத்தூர் கிராமம் இந்திராகாந்தி தெருவைச் சேர்ந்த குப்பன் என்பவரின் மகன் வெங்கடேசன் இன்று மாவட்ட காவல் துணைகண்காணிப்பாளர்   அலுவலகத்தில்  புகார் மனு  அளித்தார் 
 அந்த மனுவில் கூறியிருப்பதாவது

 நான் சாத்தூர் கிராமத்தில் என் குடும்பத்துடன் வசித்து வருகிறேன் எனக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர் என்னுடைய மகன் பெயர் அருள்நாதன் வயது 25 எனக்கும் எனது பக்கத்து வீட்டுக்காரன  பிச்சைக்காரன் என்பவருடைய மகன் கங்கப்பன் என்பவருக்கும் கடந்த மூன்று வருட காலமாக வீட்டுமனை பிரச்சனை இருந்து வருகிறது

 இது சம்பந்தமாக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டு ஆற்காடு தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆற்காடு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது அந்த நாள் முதற்கொண்டு பிச்சைக்காரன் மகன் கங்கப்பன் எங்கள் மீது பகை வைத்துக்கொண்டு நாங்கள் போகும், போதும் வரும்போதும் சண்டை வலிப்பதும், மிரட்டுவதும் வாடிக்கையாக கொண்டுள்ளார் 

இது சம்பந்தமாக 23. 11. 2021 எங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டி ஆற்காடு தாலுகா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தோம் இந்த நிலையில் கடந்த 5.1.22 அன்று காலை 9.30 மணி அளவில் என்னுடைய மகன் அருள்நாதன் ராணிப்பேட்டை க்கு வேலைக்கு சென்று கொண்டிருந்த போது மேற்கண்ட நபர் கங்கப்பன் இரண்டு சக்கர வாகனத்தில் என்னுடைய மகனுடைய வாகனத்தை பின்தொடர்ந்து கத்தியைக் எடுத்து  கொண்டு  என் மகனை பின்தொடர்ந்து வந்து கத்தியைக் கொண்டு வெட்ட வந்த போது என் மகனுக்கும் அவருக்கும் கைகலப்பு ஏற்பட்டு

 என் மகன் அவரிடம் இருந்து தப்பி ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு சென்றுள்ளார் பின் தொடர்ந்து வந்து ராஜேஸ்வரி திரையரங்கம் அருகே மறுபடியும் மடக்கி சரமாரியாக தாக்கியுள்ளார்

 என் மகனுக்கு உள் காயம் ஏற்பட்டு இடது இடுப்பு பகுதியில் கத்தியால் கீறியுள்ளார் மறுபடியும் அங்கிருந்து தப்பி ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் மருத்துவமனை அருகிலேயே வந்து வெளியே வாடா உன்னை வெட்டி புதைத்து விடுகிறேன் என்று கூப்பிட மருத்துவ உதவியாளர் அவரை அதட்டியுள்ளார்

 அப்போழுது அங்கிருந்து ஓடியிருக்கிறார் மேலும் அன்று இரவே என்னுடைய  வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவை உடைத்து, வீட்டின் அருகில் வைத்து வைக்கப்பட்டுள்ள ஆயிரம் லிட்டர் வாட்டர் டேங்க் கத்தியால் வெட்டி சேதப்படுத்தியுள்ளார்

 இவரால் எனக்கும் என் மகனுக்கும் எப்போது வேண்டுமானாலும் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது எனவே இவர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து என்னையும் என் மகனையும் காப்பாற்றுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்  இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்  

மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஊர் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்தபோது பிச்சை மகன் கங்கப்பன் நாளுக்கு நாள்  ரவுடி போல பாவித்து உலா வந்து கொண்டிருக்கிறார்  இவரின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது

  என்னால் எந்த நேரத்திலும் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.
Previous Post Next Post