சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசனத் திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ளவும், தேர் நான்கு வீதிகளில் வலம் வரவும், தரிசனம் திருவிழா சிறப்பாக வழக்கம்போல் நடைபெற

*சிதம்பரம் நடராஜர் கோவிலில்  மார்கழி ஆருத்ரா தரிசனத் திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ளவும், தேர் நான்கு வீதிகளில் வலம் வரவும், தரிசனம் திருவிழா சிறப்பாக வழக்கம்போல் நடைபெற அனுமதி வழங்கிட  கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக செயலாளரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன்  கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.பாலசுப்பிரமணியம் இ.ஆ.ப., அவர்களிடம் கோரிக்கை மனுவினை அளித்தார்.* *அப்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.எஸ்.அருள், மாவட்ட கழக அவைத்தலைவர் எம்.எஸ்.என். குமார், மாவட்ட கழக பொருளாளர் தோப்பு கே.சுந்தர்,  மாவட்ட மாணவர் அணி பொருளாளர் சங்கர்,  நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் பாஸ்கர் தீட்சிதர், நவமணி தீக்ஷிதர், சிவ சங்கர தீட்சிதர், நடராஜ ரத்தினசபாபதி தீட்சிதர், கார்த்தி தீட்சிதர் ஆகியோர் உடனிருந்தனர்.*
Previous Post Next Post