சிதம்பரம் வடலூர் சாரண சாரணியர்களுக்கான ஆளுநர் விருது தேர்வு முகம் நிறைவு.


சிதம்பரம் வடலூர் சாரண மாவட்ட சாரண சாரணியர்களுக்கான ஆளுநர் விருது முகாம் சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
செப்டம்பர் 31 முதல் நவம்பர் 2 வரை வரை மூன்று நாட்கள் நடைபெற்ற முகாமில் சிதம்பரம் வடலூர் சாரண மாவட்டத்தின் சார்பில் 32 பள்ளிகளை சார்ந்த 137 சாரணர்களும் 69 சாரணியர்களும் 35 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
முகாமின் நிறைவு விழா வீனஸ் குழுமப் பள்ளிகளின் நிறுவனருமான சிதம்பரம் மாவட்டம் சாரணத் தலைவருமான வீனஸ். எஸ். குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் ஏ. ரூபியால் ராணி அவர்கள்,பள்ளியின் முதல்வர் டி.நரேந்திரன், வடலூர் மாவட்ட சாரண ஆணையர் முருகையன், சாரணிய ஆணையர் சுகிர்தா தாமஸ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். சிதம்பரம் சாரண செயலர் பாக்கியராஜ் வரவேற்றார்.
மாநிலத் தலைமையகத்தால் நியமிக்கப்பட்ட முதன்மைத் தேர்வாளர்கள் என். வேலாயுதம் பி. வீரப்பா கே. உஷாராணி ஆகியோர் நடுவர்களாக இருந்து ஆளுநர் விருதுகளுக்கான சாரண சாரணியர்களை தேர்வு செய்தனர். முகாமில் சாரண உறுதிமொழி, சட்டம், குறிக்கோள், பாடல்கள், முதலுதவி, மதிப்பீடு, நிலப்படக்கலை , முடிச்சுடுகள், கூடாரங்கள் அமைத்தல் போன்ற பாடத்திட்டத்தின் செயல்முறை மற்றும் எழுத்து தேர்வுகள் நடைபெற்றன.
முகாமின் ஏற்பாடுகளை சாரண சாரணிய ஆசிரியர்கள் அன்புவேல் சுதாகர், நடராஜன், மதன்ராஜ், சோமசுந்தரம், சிவகுமார், வெங்கடேசன், ஆர். ஜெயந்தி, வி. கவிதா ஆர். கோமதி ஆகியோர் செய்திருந்தனர்.
நிறைவாக வடலூர் மாவட்ட சாரண செயலர் செந்தில் குமார் நன்றி கூறினார்.
Previous Post Next Post