உங்கள் பதவியை ராஜினாமா செய்வீர்களா? நகர மன்ற தலைவர் காரசார பேச்சு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் நேற்று மாதாந்திர நகர மன்ற கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமை தாங்கினார் துணைத் தலைவர் பவளக்கொடி சரவணன் முன்னிலை வகித்தார் கூட்டம் தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கியது
கூட்டத் தொடக்கத்திலேயே நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன் 12வது வார்டு சுயேட்சை உறுப்பினர் லோகேஷ் என்பவர் விதிமுறைகளை மீறி வாட்ஸபில் செய்தியை பரப்பியதாககூறி நகரமன்ற கூட்டத்திலிருந்து வெளியேற உத்தரவிட்டார் மேலும் இரண்டு மாதம் சஸ்பெண்ட் செய்தார்
மேலும் 5வது வார்டு உறுப்பினர் தமிழ்ச்செல்விக்கும்
ஜே.பி நிறுவனத்திற்கும் பண பரிவர்த்தனை நடைபெற்று இருப்பதாகவும் இதனை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க ஆணையருக்கு உத்தரவிட்டார்
அதனை தொடர்ந்து பேசிய நகர மன்ற தலைவர் தேவிபென்ஸ் பாண்டியன் பத்திரிகையாளர்களை எச்சரிக்கிறேன் என் அனுமதி இல்லாமல் வீடியோவோ? அல்லது போட்டோவோ? எடுத்தால் உங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
அதனைத் தொடர்ந்து நகரமன்ற உறுப்பினர்கள் வார்டுகளில் உள்ள நிறை, குறைகளை எடுத்துரைத்தனர் 2 வது வார்டு உறுப்பினர் ராஜசேகர் பேசும்போது நகரமன்றத் தலைவர், ஆணையாளர் இருவரும் ஒவ்வொரு வார்டுகளுக்கும் சென்று ஆய்வு செய்து பணிகளை செய்ய வேண்டும் மேலும் ஆற்காடு பேருந்து நிலையத்தில் பாத்ரூம் கட்டடத்திற்கு தந்தை பெரியார் பெயர் வைத்துள்ளதாக வாட்ஸாப் மூலம் தெரிந்து கொண்டோம் சந்தோஷம் ஆனால் நகர மன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் தீர்மானம் போடும்போது தகவல் தெரிவிக்கிறீர்கள் அதேபோல இந்த தகவலையும் சொல்ல வேண்டும் என்றார் அதற்க்கு பதில் அளித்து பேசிய நகரமன்ற தலைவர் கட்டிடத்திற்கு பேர் வைக்கவில்லை அப்படி வைக்காதிருந்தால் உங்கள் பதவியை ராஜினாமா! செய்வீர்களா? என்று காரசாரமாக பேசினார்
14 ஆவது வார்டு உறுப்பினர் கம்பிக்கண்ணன் பேசும்போது இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் வர இருப்பதால் அனைத்து மசூதிகளிலும் தூய்மை பணி மேற்கொள்ள கேட்டுக் கொள்வதாக கூறினார் 18-வது வார்டு செல்வம் பேசும்போது அனைத்து வார்டுகளையும் சரியான முறையில் பராமரிக்க கேட்டுக் கொண்டார் அதனைத் தொடர்ந்து 19 ஆவது வார்டு உறுப்பினர் குணா பேசுகையில் வீட்டு வசதி வாரியப் குடியிருப்பு பகுதியில் புதிதாக மின் கம்பங்கள் அமைத்து தர கோரிக்கை விடுத்தார்
20 வது வார்டு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி பேசும்போது கோடை காலம் ஆரம்பிப்பதால் அனைத்து பொதுமக்களுக்கும் மின்சாரம் தடையில்லாமல் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றார் 4 வது வார்டு உறுப்பினர் அனு பேசுகையில் நான்காவது வார்டுக்குட்பட்ட இடத்தில் மீன் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள் இந்த விற்பனை தரமற்ற முறையில் இருக்கிறது உணவுத்துறை அதிகாரி ரவிச்சந்திரனுக்கு போன் மற்றும் வாட்ஸ் அப் மூலமாக புகார் தெரிவித்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
மேலும் சூப்பர் மார்க்கெட், சிறிய பெரிய கடைகளிலும் குளிர்பான கடங்களிலும் ஹோட்டல்களிலும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக உள்ளது பிளாஸ்டிக் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார் 23 வது வார்டு உறுப்பினர் காமாட்சி பேசுகையில் 23 ஆவது வார்டுக்குட்பட்ட பகுதியில் மழை நீர் வடிகால் கால்வாய் அமைத்து தரப்பட்டுள்ளது கால்வாயில் வரும் தண்ணீர் வெளியேறுவதற்குரிய வழி இல்லை இதனால் கால்வாய்களில் தண்ணீர் தேங்கி நோய் தொற்று ஏற்படும் அபாய நிலை உள்ளது
பெரிய தண்டுகாரன் தெரு, பிள்ளையார் கோவில் தெருவிற்க்கு சாலை வசதி அமைத்து தர கோரிக்கை வைத்தார்
5வது வார்டு உறுப்பினர் பேசும்போது எங்கள் வார்டுக்குட்பட்ட பகுதியில் காரியமடை கட்டித்தருவதற்காக நான்கு வருடங்களாக கோரிக்கை வைத்தும் இதுவரை என்ன நடவடிக்கையும் எடுக்கவில்லை பொதுமக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை என்னதான் செய்யப் போறிங்க என்று நகர் மன்ற தலைவரிடம் கேட்டார் அதற்கு பதில் அளித்து பேசிய நகர மன்ற தலைவர் இதற்கு முன்பாக நீங்கள் அதே வார்டில் உறுப்பினராக இருந்திருக்கிறீர்கள்
அப்பொழுது கட்டித் தர வேண்டியதுதானே இதுவரைக்கும் என்ன பண்ணிட்டு இருந்தீங்க என்று கேட்டு நாங்கள் இடம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் இடம் பார்த்து முடிவு செய்த பிறகு அதற்குரிய முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.