தேனி மாவட்டம் கம்பம் நகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.!!

தேனி மாவட்டம் கம்பம் நகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.!!
தேனி மாவட்டம் கம்பம் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பேரில் நகர் பகுதி முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது நாக கன்னியம்மன் கோவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றுள்ளனர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார் அவர்கள் வைத்திருந்த 3 சாக்கு பையை சோதனை செய்ததில் 10 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டதில் கம்பம் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த சிவராஜா(வயது 37), மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மேக்கிழார்பட்டியைச் சேர்ந்த குணசேகர்(55), ராஜபாளையம் சங்கரபாண்டியபுரத்தைச் சேர்ந்த ராம்குமார்(23) மற்றும் ஜங்கால்பட்டி கிழக்குத்தெருவைச் சேர்ந்த அபினேஷ்(25) என்பதும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை விலைக்கு வாங்கி வந்து கம்பம் நகர் பகுதியில் விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து கம்பம் வடக்கு போலீசார் சிவராஜா, குணசேகர், ராம்குமார், அபினேஷ் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்......
Previous Post Next Post