மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைவசெய்த இராணுவ வீரர் காவல் நிலையத்தின் முன்பே உறவினர்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரேவதி என்ற முதுகலை பட்டதாரி இளம்பெண்ணை அதே கிராமத்தைச் சேர்ந்த பால்பாண்டி மகன் ராமன் என்ற இராணுவ வீரர் இவர் திருமண ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் உசிலம்பட்டி அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
இந்நிலையில் இன்று இராணுவ வீரரான ராமன் விசாரணைக்காக ஆஜரான நிலையில்
விசாரணையில் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன், இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்தாக தெரிவித்ததாக கூறப்படுகிறது, இந்த வழக்கு தொடர்பாக இராணுவ வீரர் இராமன்-யை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு போலீசார் அழைத்து சென்ற போது, இராமன் இளம்பெண்னின் வீட்டினரை மிரட்டியதாக கூறி உறவினர்கள் இருபிரிவினரும் காவல் நிலையம் முன்பே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
பின்னர் அங்கு பணியில் இருந்த போலீசார் தாக்குதல் நடத்தியவர்களிடமிருந்து இராணுவ வீரரை மீட்டு நீதிமன்ற காவலுக்காக அழைத்து சென்றனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது