தமிழ்நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கொடுப்பது அல்வாதான் என கூறி மன்னார்குடியில் பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து துண்டு பிரசுரங்களை வழங்கி திமுகவினர் நூதன போராட்டம்
தமிழ்நாடு அரசை பழிவாங்கும் நோக்கோடு பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மிக்சாம் புயல் உள்ளிட்ட பல்வேறு இயற்கை இடர்பாடுகளை சந்தித்து பாதிக்கப்பட்டு வரும் பொதுமக்களுக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்காததை கண்டித்து, ஒன்றிய அரசு தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்காததை கண்டித்து, இந்தியாவில் ஒரு மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டை பிரித்துப் பார்க்கும் ஒன்றிய பாஜக அரசு கண்டித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பேருந்து நிலையத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் சார்பில் பொதுமக்களுக்கு அல்வா கொடுக்கும் நூதன போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கொடுப்பது அல்வாதான் என கூறி பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து துண்டு பிரசுரங்கள் வழங்கினார்கள் இதில் நகர் மன்ற தலைவர் மன்னை சோழராஜன், நகர செயலாளர் வீரா கணேசன் தலைமையில், பாஜக கொடுத்தது அல்வா தான் என கூறி அல்வா கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.