மன்னார்குடியில் 1,759 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ78கோடி வங்கிக்கடன் இணைப்பு மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ வழங்கினர்.

மன்னார்குடியில் 1,759 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ78கோடி வங்கிக்கடன் இணைப்பு மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள்  மாவட்ட ஆட்சியர்  சாருஸ்ரீ  வழங்கினர்.
 

தமிழ்நாடு ஊரக  நகர்புற வாழ்வாதார இயக்கம், திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக  நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஊரக பகுதியில் 11,950 மகளிர் சுய உதவிக்குழுக்களும் நகர்புற பகுதிகளில் 4,670 மகளிர் சுய உதவிக்குழுக்களும் மொத்தம் திருவாருர் மாவட்டத்தில் 16,620 சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகிறது. இதுவரை 2023-2024-ம் நிதி ஆண்டில் 12,024 குழுக்களுக்கு ரூ.675.00 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  ஈரோடு மாவட்டத்தில்  மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நேரடி வங்கிக்கடன் வழங்கும் விழா இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  தலைமையில் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி  அருகே   இடையர்நத்தம், தனியார் திருமண அரங்கில் அந்த நிகழ்ச்சி நேரடி ஒளிப்பரப்பு செய்து இவ்விழாவில்   மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி. கே.கலைவாணன் , மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு ஆகியோர் கலந்து கொண்டு 1,759 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு  ரு 78 கோடி வங்கிக்கடன் இணைப்பு மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள்  வழங்கப்பட்டது . 

Previous Post Next Post