இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி மாநகர் மாவட்ட மேற்கு பகுதி குழு சார்பாக மாமன்ற உறுப்பினர் ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் தோழர் க. சுரேஷ் அவர்கள் தலைமையில் கூலித் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் தையல் இயந்திரம், சலவைப் பெட்டி வழங்கக்கோரி மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களிடம் ஏற்கனவே ஏப்ரல் 14ஆம் தேதி மனு கொடுக்கப்பட்டது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி மாநகர் மாவட்ட மேற்கு பகுதி குழு சார்பாக மாமன்ற உறுப்பினர்  ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் தோழர் க. சுரேஷ் அவர்கள் தலைமையில் கூலித்  தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் தையல் இயந்திரம், சலவைப் பெட்டி வழங்கக்கோரி மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களிடம் ஏற்கனவே ஏப்ரல் 14ஆம் தேதி மனு கொடுக்கப்பட்டது. 
அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் கொண்ட குழு சொந்த வீடு இல்லாத 44 பேருக்கு வீட்டுமனை பட்டா அல்லது குடிசை மாற்று வாரியத்தில் வீடு வழங்க நடவடிக்கை எடுக்க பட்டியல் தயார் செய்யப்பட்ட நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் மேற்கு பகுதி செயலாளர் இரா சுரேஷ் முத்துசாமி,  கட்டுமான சங்க மாவட்டத் துணைச் செயலாளர் ம.சுமதி மற்றும் கங்காதேவி, சுலோச்சனா, நசீமா,  பர்ஜானா, முகமுதா, பாத்திமுத்து, பானுமதி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.
Previous Post Next Post