MANNARGUDI FARMERS AARPATTAM NEWS 25.09.2023.mp4
தருண்சுரேஷ் செல் : 9791655612 மன்னார்குடி 25.09.2023
கர்நாடக பந்த் போராட்டத்தை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தேசியக்கொடியுடன் உழைப்பாளர் சிலை அருகே தர்ணாவில் ஈடுபட்ட பி.ஆர். பாண்டியன் கைது செய்யப்பட்டதை கண்டித்து மன்னார்குடியில் சாலைமறியல் போராட்டம்
சென்னை மெரினா உழைப்பாளர் சிலை அருகில் கர்நாடகாவின் பந்த் போராட்டத்தை தடுத்து நிறுத்த மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர்.பாண்டியன் தேசியக் கொடி ஏந்தி இன்று தர்ணாவில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து பி.ஆர்.பாண்டியனை கைது செய்து குண்டுகட்டாக தூக்கி சென்று சிறைவைத்துள்ளனர். காவிரி டெல்டாவில் 5 லட்சம் ஏக்கர் குறுவைப் பயிர் சாகுபடி செய்யப்பட்டு 3.50 லட்சம் ஏக்கரில் கருக தொடங்கிவிட்டது. சுமார் 15 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி துவங்க முடியவில்லை. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 5000 கன அடி வீதம் 15 தினங்களுக்கு தண்ணீர் விடுவிக்க உத்திரவிட்டது. கர்நாடகாவில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்கமாட்டோம் என்று கூறி நாளை 26 ஆம் தேதி முழுஅடைப்பு பந்த் போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்து உள்ளனர். இந்நிலையில் நாளை பந்த் போராட்டத்திற்கு சித்ராமய்யா ஆதரவு தெரிவிப்பதால் பெரும் கலவரம் வெடிக்கும். தமிழர்களுக்கு மிகப்பெரிய பேரிழப்பு ஏற்படும். உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பந்த் போராட்டம் நடத்துவதை மத்திய அரசு பிரதமர் தலையிட்டு தடை விதிக்க வேண்டும். இதனை தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து சென்னை மெரினா உழைப்பாளர் சிலை அருகில் தேசியக்கொடியை பிடித்து அமைதி ஏற்படுத்த வேண்டும் என பொதுச் செயலாளர் விகே துரைச்சாமியோடு தர்ணாவில் ஈடுபட்ட போது பி.ஆர்.பாண்டியன் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், விடுதலை செய்ய வலியுறுத்தியும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ருக்மணி பாளையம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 25த்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர் ..
FILE NAME : MANNARGUDI FARMERS AARPATTAM NEWS 25.09.2023