அதிமுக கட்சியிலே பல துரோகிகள் வந்து துரோகத்தை விளைவித்தார்கள் அதெல்லாம் இப்பொழுது எடுபடாமல் போய்விட்டது என மன்னார்குடி அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேச்சு
அதிமுக கட்சியிலே பல துரோகிகள் வந்து துரோகத்தை விளைவித்தார்கள் அதெல்லாம் இப்பொழுது எடுபடாமல் போய்விட்டது என மன்னார்குடி அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேச்சு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் முன்னாள் அமைச்சரும் திருவாரூர் மாவட்ட செயலாளருமான ஆர் காமராஜ் கலந்து கொண்டு பேசினார் வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் பூத் கமிட்டி அமைப்பது தேர்தலில் பணியாற்றுவது ஒருவேளை நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் சேர்த்து வைக்கப்பட்டால் அதிலும் திறம்பட பணியாற்றுவது குறித்து இதில் விவாதிக்கப்பட்டது . பொதுக்குழுவிற்கு பிறகு புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்ப்பதற்கான படிவங்களும் கூட்டத்தில் வழங்கப்பட்டது வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடவும் இக்கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ் வேறு எந்த கிராமத்தில் , நகரத்தில் , பேரூராட்சியில் , ஒன்றியத்திலாவது அதிமுகவினர் ஒரு நபர் கூட மாற்று கட்சியில் இணைந்திருக்க மாட்டார்கள் . புரட்சித் தலைவர் எம்ஜிஆர் வழியில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழியில் ஒன்றரை கோடி தொண்டர்களாக இருந்த இயக்கத்தை 2 கோடி தொண்டர்களாக உருவாக்கியவர் எழுச்சித் தமிழர் எடப்பாடி பழனிச்சாமி இடைத்தேர்தலுடன் ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற அடிப்படையில் நாடாளுமன்ற தேர்தலுக்கும் தயாராக இருக்க வேண்டும் அதோடு சட்டமன்ற தேர்தலுக்கும் தயாராக இருக்க வேண்டும் அம்மாவின் ஆட்சி எடப்பாடி யார் தலைமையில் மலரும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது வேறு யாரும் இந்த அதிமுகவிற்கு எதிரிகள் கிடையாது உள் கட்சியிலே பல துரோகிகள் வந்து துரோகத்தை விளைவித்தார்கள் அதெல்லாம் இப்பொழுது எடுபடாமல் போகிவிட்டது . அதிமுக இரண்டாக உடைந்து விட்டது மூன்றாக பிரிந்து விட்டது என கூறினார்கள் . அண்ணா திமுக இரண்டாகவும் மூன்றாகவும் இல்லை அதிமுக ஒன்றாகதான் இருக்கிறது அண்ணன் எடப்பாடி தலைமையில்தான் இருக்கிறது இது திமுகவின் வேலை திமுக பிரித்து கையாளுகின்ற சூழ்நிலையை உருவாக்கியது யாரையாவது பிரிக்கலாம் என்று நினைத்தார்கள் ஆனால் அதிமுக தொண்டர்கள் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள் அண்ணா திமுக தொண்டர்கள் ஒரே அணியில் இருக்கிறார்கள் ஒரே தலைமையில் இருக்கிறார்கள் அதுவும் எடப்பாடி யார் தலைமையில் தான் இருக்கிறார்கள் 15 லட்சம் பேர் கூடிய மாநாட்டை இதுவரை தமிழ்நாட்டில் யாரும் நடத்தவில்லை என்றார் . 15 லட்சம் பேர் ஒரே இடத்தில் கூடுகின்ற போது சாப்பாடு மிச்சம் பட்டுவிட்டது என்று யாரும் கூறவில்லை அல்லது சாப்பிட்டுவிட்டு வாந்தி மயக்கம் பேதி வந்துவிட்டது என்று யாரும் கூறவில்லை அது வந்தால் தான் பிரச்சனை மிச்சம் ஆகியதால் உங்களுக்கு என்ன கவலை சாப்பாடு மீதம் பட்டுவிட்டால் மீடியாவிற்கும் எதிர்கட்சிக்கும் என்ன கவலை சாப்பாடு மீதம் ஆகிற அளவுக்கு சாப்பாடு அனைவருக்கும் வழங்கினோம் என்றார்
இக்கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் சிவா ராஜமாணிக்கம் மன்னார்குடி நகரச் செயலாளர் ஆர்.ஜி.குமார் உள்ளிட்ட திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
FILE NAME : MANNARGUDI ADMK EXECUTIVES MEETING 12.09.2023