சென்னை அருகே கூடுவாஞ்சேரி நீலன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தமிழ்நாடு நிலத்தடி நீர் மேலாண்மை இயக்கம் சார்பில் நடைபெற்ற மாணவர் மாணவிகளுடான கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் பங்கேற்று பேசினார்.


சென்னை அருகே கூடுவாஞ்சேரி நீலன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தமிழ்நாடு நிலத்தடி நீர் மேலாண்மை இயக்கம் சார்பில் நடைபெற்ற மாணவர் மாணவிகளுடான கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் பங்கேற்று பேசினார்.
முன்னதாக மாணவ, மாணவியர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்று விளக்கமாக பதிலளித்தார். பள்ளியின் தாளாளர் நீலன் அரசு தலைமையற்றார். நீர் மேலாண்மை திட்ட இயக்குனர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட இருபால் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பி ஆர் பாண்டியன் பேசியதாவது: 

உலகத்தில் நுகர்வு கலாச்சாரம் மேலோங்கி இருக்கும் இந்த காலகட்டத்தில்,வாழ்வியலின் அடிப்படை நீர் ஆதாரத்தை நம்பியே இருக்கிறது.நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது நிலத்தடி நீராகும். நீரின்றி அமையாது உலகு என்கிற வள்ளுவரின் குறளுக்கேற்ப இப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தமிழ்நாடு நீர் மேலாண்மை இயக்கம் என்ற அமைப்பை தமிழ்நாட்டின் முதன் முதலில் உருவாக்கி உள்ளது பாராட்டுக்குறியது.

38 மாவட்டங்களிலும் உள்ளடக்கிய நீர் ஆதார களப் பயிற்சியுடன் மாணவர்களை நீர் மேலாண்மையில் புலமை பெற்றவர்களாக உருவாக்கி வருவது பாராட்டுக்குரியது.என்சிசி. என்எஸ்எஸ் போன்ற இயக்கங்கள் அனைத்து பள்ளிகளிலும் ஏற்படுத்தி மாணவர்களை பொது சேவைக்கு ஈடுபடுத்துவது வழக்கமான ஒன்று. அதுபோல ஆண்டு விழாக்களில் பண்பாட்டு கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தி மாணவர்களை மகிழ்விப்பது நடைமுறையில் உள்ளது. அதற்கெல்லாம் அப்பாற்பட்டு நிலத்தடி நீர் பாதுகாப்பு நீர் மேலாண்மை குறித்தான ஒரு அமைப்பை உருவாக்கி மிகப் பெரும் விழிப்புணர்வை இப்பள்ளி ஏற்படுத்தி உள்ளது பாராட்டுக்குரியது.பன்முக தன்மை கொண்ட பள்ளிக்கூடமாக இப்பள்ளி விளங்குகிறது.

குறிப்பாக பருவநிலை மாற்றம் குறித்து ஜி 20 மாநாடுகள் நடத்தப்படுகிறது. ஆனால் இயற்கை வளங்கள் ஒரு பக்கம் அழிக்கப்படுகிறது. தொழில் வளர்ச்சி என்கிற பெயரால் காற்று மாசடைகிறது.நிலத்தடி நீர் பறிபோனதுடன் குடிக்கும் தண்ணீரே விஷம் ஆகிவிட்டது. இதிலிருந்து பாதுகாக்க வேண்டுமானால் மாணவப் பருவத்திலேயே நீர் சேமிப்பு குறித்தான ஒரு விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுவது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது.மாணவ மாணவிகளோடு கலந்துரையாடுகிற போது கலி அனுபவத்தோடு கேள்விகள் கேட்பதும்.பதில் அளிப்பதும் என்னை மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. அரசே நடத்த வேண்டிய ஒரு இயக்கத்தை முன்மாதிரியாக நீலன் பள்ளி துவங்கி இருப்பது முன்னுதாரணமாக திகழ்கிறது. 

மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு. கனிமவள பாதுகாப்பு,மழைநீர் சேகரிப்பு,நிலத்தடி நீர் பராமரிப்பு. சிக்கனமாக நீரை பயன்படுத்துவது குறித்தான விரிவான ஆய்வுகளை இப்பள்ளி இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்டு வருவது எதிர்கால சந்ததியினருக்கு குடிநீருக்கான உத்தரவாதத்தை ஏற்படுத்தும் நம்பிக்கையளிக்கிறது.எனவே இப்பள்ளியின் நீர் மேலாண்மை இயக்கம் உருவாக்கி இருப்பதை பின்பற்றி தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் உருவாக்க வேண்டும். இதன் மூலம் பருவநிலை மாற்றத்திற்கான அடிப்படையை கண்டறிந்து பேரழிவிழிருந்து நாட்டை மீட்டெடுக்க மாணவ சமுதாயம் விழிப்புனர்வு பெறும் வகையில் மத்திய,மாநில அரசுகள் கொள்கை திட்டங்களை உருவாக்க வேண்டும். அதற்கான முன் முயற்சியை நானும் மேற்கொள்வேன் என்று உறுதி அளிக்கிறேன் என்றார்.

இவன்:என்.மணிமாறன் 
செய்தி தொடர்பாளர்.
Previous Post Next Post