விவசாயிகள், நுகர்வோர் நலனுக்கு எதிராக செயல்படும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மன்னார்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்…
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகராட்சி அலுவலகம் எதிரே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மத்திய, மாநில அரசுகள் நுகர்வோர் மற்றும் விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம்சாட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய தமிழக விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதா மூலம் நீர் நிலைகளை தொழில் வளர்ச்சி என்ற பெயரில் பெரு நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் நில ஒருங்கிணைப்பு மசோதாவை கைவிட வலியுறுத்தியதோடு மத்தியில் ஆளும் பாஜக அரசு நுகர்வோர்களின் நலனை பாதிக்கக் கூடிய வகையில் நுகர்வோர்கள் கருத்தறியாமல் செறிவூட்டிய கலப்பு அரிசி வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டி வலியுறுத்தினர். தொடர்ந்து போராட்டத்தில் நுகர்வோர், விவசாயிகள் ஆகியோர்களுக்கு எதிராக செயல்படும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பி கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்