தேனி மாவட்டம் சின்னமனூரில் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய கோரி காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை வலுக்கட்டாயமாக காவல்துறை கைது செய்ததை கண்டித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி அவர்கள்திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு....

தேனி மாவட்டம் சின்னமனூரில் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய கோரி  காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை வலுக்கட்டாயமாக காவல்துறை கைது செய்ததை கண்டித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி அவர்கள்திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு....




ஜன:18
ஆவணம்: 1
தேனி மாவட்ட செய்தியாளர்: இரா.இராஜா
9655331932



தேனி மாவட்டம் சின்னமனூரில் திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலை ஒட்டி நகரின் மையப்பகுதியில் உள்ள எள்ளு காட்டு தெருவில் அமைந்துள்ளது 85 47 என் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடை. 

இந்த மதுபான கடையை சுற்றிலும் வணிக வளாகங்களும் அருகே வயல்வெளிகளும் உள்ளதால் பொதுமக்களும் விவசாய பணிக்குச் செல்லும் பெண்களும் இந்தச் சாலையை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த பகுதி வழியாக செல்லும் பெண்களும் பொதுமக்களும் குடிமகன்களின் தொல்லையால் மிகவும் அச்சமடைகின்றனர் எனவே இதனை கண்டித்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி அவர்களின் தலைமையில் கண்டன போராட்டம் நடைபெற்றது இதனை தொடர்ந்து ஒரு மாத காலத்தில் இந்த டாஸ்மாக் கடையை மாற்றிக் கொள்வதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் மூன்று மாதங்களுக்கு மேலாக ஆகியும் கடையை மாற்றாததால் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடையை வேறு இடத்திற்கு மாற்ற கோரி மார்க்கையன்கோட்டை விளக்கிலிருந்து கண்டன கோஷங்களை எழுப்பிய வண்ணம் கடையை நோக்கி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட வந்தனர் இவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து தனியார் மண்டபத்திற்கு கொண்டு செல்லும் நிலையில் இப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த பாலபாரதி அவர்கள் கட்டாயமாக போலீசார் கைது செய்து கண்டித்து சின்னமனூரில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டார்.

இந்த சாலை மறியலில் ஈடுபட்ட பாலபாரதி அவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதோடு சின்னமனூர் பகுதியில் மிகவும் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.
Previous Post Next Post