சின்னமனூர் அருகே சீப்பாலக்கோட்டையில் கிராமசபை கூட்டத்தை நடத்த விடாமல் விசிக கட்சியினர் முற்றுகையிட்டடு கேஷம் இட்டதால் பரபரப்பு .......

சின்னமனூர்- 26.01.2023.

சின்னமனூர் அருகே சீப்பாலக்கோட்டையில்  கிராமசபை கூட்டத்தை நடத்த விடாமல் விசிக கட்சியினர்  முற்றுகையிட்டடு கேஷம் இட்டதால்  பரபரப்பு .......
ஜன-26
ஆவணம்:1
தேனி மாவட்ட செய்தியாளர்: இரா.இராஜா



தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே  சீப்பாலக்கோட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகாதேவி  செயல்படுத்தாத திட்டத்திற்க்கு நிதி ஒதுக்கி கையாடல் செய்ததாகவும் பல முறை  புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால்  ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகா தேவியின்  தலைவர்  பதவியை ராஜினாம செய்ய கோரி விடுதலை சிறுத்தை கட்சி விசிக  தேனி மேற்கு மாவட்ட  செயலாளர் சுருளி  கிராம சபை கூட்டத்தை  முற்றுகையிட்டு கோஷம் மிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது  தொடர்ந்து ஊராட்சி அலுவலர்கள் பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த பலனும் எட்டவில்லை இதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற மாவட்ட இயக்குனர் நேரில் வந்து பேச்சு வார்த்தை நடத்தி 15. நாட்களுக்குள் உருதியாக ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் உடன்பாடு ஏற்பட்டது 

தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் ஊராட்சி மன்ற தலைவர் மீது பல முறை புகார் அளித்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பல ஆவணங்களை  அளித்தும்  நடவடிக்கை இல்லை இதனால் தான் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை நடத்த விடாமல் செய்ததாகவும் ஒரு வேளை புகார் அளித்த எப்கள் மீது தவறு இருந்தால் எங்களை கைது செய்யுங்கள் என அலுவலர்களிடம் கூறினோம் ஆனால் எந்த பதிலும் முறையாக இல்லை தொடர்ந்து அலுவலர்கள் கூறியது போல் 15. நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் தங்களது விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் பொதுமக்களை ஒன்றினைத்து சாலை மறியல் செய்ய போவதாக விசிக தேனி மேற்க்கு  மாவட்ட செயலாளர் கருளி தெரிவித்தார் காலை 11. மணிக்கு துவங்கிய கிராமசபை கூட்டம் நடைபெறாமல் போனது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது...
Previous Post Next Post