மாதுளையில் பேக்கிங் செய்முறை விளக்கம்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டாரம் பொம்ம சமுத்திரம் கிராமத்தில் பிஜிபி வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள் மாதுளையில் பேக்கிங் செய்து விவசாயப் பெருமக்களுக்கு எடுத்துரைத்தனர்.அண்மைக் காலமாக பாசன வசதியின் கீழ் அதிக மகசூல் தரக்கூடிய மாதுளை வகைகளை தீவிர பராமரிப்பு மற்றும் நிர்வாகத்துடன் பயிரிட்டது சில கடுமையான பூச்சி பிரச்சனைகளுக்கு வழிவகுத்தது.அவற்றுள், அனார் பட்டாம்பூச்சி (பழம் துளைப்பான்), _டியூடோரிக்ஸ் ஐசோக்ரேட்ஸ்_ ஆகியவற்றின் தாக்குதலால் மாதுளை பழங்களின் மகசூல் குறைந்து, விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. பழங்களின் அளவு மற்றும் தரத்தில் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.மேலும் கம்பிலி பூச்சியின் அறிகுறிகள் இளம் பழங்களில் துளையிடும் மற்றும் உட்புற உள்ளடக்கங்களை (கூழ் மற்றும் விதைகள் ) ஊட்டுகிறது.பழங்கள் அழுகும் மற்றும் உதிர்தல் ஏற்படலாம்.மேலும் மாதுளையில் பேக்கிங் பின்பற்றுவதன் மூலம் பலத்தின் எடை பூமித்திய ரேகை விட்டம் உயரம் மற்றும் பழத்தின் வடிவம் ஆகியவற்றின் மீது பல புதிய குறிப்பிடத்தக்க விளைவு கொடுக்கிறது என்று எடுத்துரைத்தனர்.மேலும் இது எளிய முறை என்பதனால் மக்களும் ஆர்வம் காட்டினர்.