தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சியின் சார்பாக மீண்டும் மஞ்சப்பை மற்றும் குப்பைகளை தெருக்களில் கொட்டாதீர்கள் என விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.....
ஜன-28
ஆவணம்: 3
தேனி மாவட்ட செய்தியாளர்: இரா.இராஜா
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சியின் சார்பாக குப்பைகளை தெருக்களில் கொட்ட கூடாது என்றும் மஞ்சப்பையை பயன்படுத்துவோம் என்றோம் உத்தமபாளையம் கிராம சாவடி அம்பேத்கர் திடலில் இருந்து பேரணையானது துவங்கியது. பேரூராட்சி மன்ற தலைவர் முகமது அப்துல் காசிம் அவர்கள் தலைமையில் பேரூராட்சிகள் துறை இயக்குநர் மலையமான் கொடியசைத்து துவக்கி வைத்தார். உத்தமபாளையம் நகரின் முக்கிய வீதிகளில் வழியாக ஊர்வலம் பேரூராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது இதில் அண்ணார்வலர்களும் தன்னார்வலர்கள் மற்றும் சாரணர் இயக்கத்தின் மாணவர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்