பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மாணவிகளின் ஊரக தோட்டக்கலைப் பணி அனுபவ பயிற்சி
தேனி மாவட்டம் மற்றும் தேனி வட்டாரத்தில் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதி ஆண்டு மாணவிகள் க.ரம்யா,மு.ரித்திகா,கோ.சத் யா, த.சங்கவி,செ.ஷாலினி, மு.சதீஸ்வரி,செல்வராஜ் கீதாஞ்சலி,மு. சி.சரிதா குமாரி,மு. ச.ஷோபிகா, செ. ஷோபிகா ஆகிய மாணவிகள் ஊரக தோட்டக்கலைப் பணி அனுபவத் திட்டத்தில் கிராமப்புறத்தில் தங்கியிருந்து விவசாயிகளுக்கு தொழில் நுட்ப செயல் விளக்கம் மற்றும் ஆலோசனைகளை வழங்கி
வருகின்றனர். தேனி மாவட்டம் உதவி தோட்டக்கலை இயக்குனர் அலுவலகத்தில் செயல் விளக்கம் செய்து காட்டினர். தேனி வட்டார விவசாயிகளுக்கு உயிர் உரங்கள் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் பயன்பாடுகளையும் கோ. சத்யா, மு. ரித்திகா, செ. ஷோபிகா ஆகியோர் செயல்விளக்கம் அளித்தனர்
திரு.மனிகன்டன் தோட்டக்கலை உதவி இயக்குநர், திரு. பாண்டியன் தோட்டக்கலை துணை அலுவலர் மற்றும் பிற தோட்டக்கலை அலுவலர்கள் திரு. கருப்பசாமி, திரு. அப்பாஸ்,திரு. சரவணன்.திரு. கிருஷ்ணகுமார்
ஆகியோர் உடன் இருந்தனர்.