விபத்து உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் ஒத்தக்கடையில் விழிப்புணர்வு பிரச்சாரம்*

விபத்து உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் ஒத்தக்கடையில் விழிப்புணர்வு பிரச்சாரம்

விபத்து உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் மட்டு மல்லாமல் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவர்களும் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒத்தக்கடை புறநகர் போக்குவரத்து போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று காலை ஒத்தக்கடை கூட்டுறவு வங்கி அருகில், மதுரை புறநகர் ஊமச்சிகுளம் காவல்துறை துணை காண்காணிப்பாளர் பிரியதர்ஷினி தலைமையில், மதுரை புறநகர் ஒத்தக்கடை போக்குவரத்து காவல்துறை சார்பில், பொதுமக்களுக்கு துண்டுபிரசுரம் வழங்கி விழிப்புணர்வு நடத்தப்பட்டது.


இந்நிகழ்ச்சியில், ஆன்லைன் மோசடியினை தடுக்கும் விதமாக 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்றும், வாகன விபத்துகளில் ஏற்படும் பெரும்பாலான உயிரிழப்புகள் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் செல்வதால் ஏற்படுவது குறித்தும் விளக்கப்பட்டது. 

இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிய வேண்டும் எனவும், இருசக்கர ஓட்டுநர் மற்றும் பின்னிருக்கையில் அமர்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும், "ஹெல் மெட், சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம்" என பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனர் .


மேலும், ஊமச்சிகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரியதர்ஷினி, இரண்டு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்த ஓட்டிகளுக்கும், நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கும் அறிவுரைகள் கூறி, ஆன்லைன் மோசடி தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுபிரசுரம் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், ஒத்தக்கடை போக்குவரத்து காவல் துறை சார்பு ஆய்வாளர் கணேஷன், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வேல்முருகன், கண்ணன், மற்றும் முதல் நிலை காவலர்கள் கவியரசு, நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்தினர்.
Previous Post Next Post