இடும்பவனம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட இடும்பவனம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
இந்த முப்பெரும் விழா நிகழ்வில் முதலில் மறைந்த மூத்த நிர்வாகிகளுக்கு அவரது திருமுகப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்ட பின்பு முப்பெரும் விழா துவங்கப்பட்டது இந்த நிகழ்வில் சங்க தலைவர் உலகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த முப்பெரும் விழாவில் தமிழக அரசால் வழங்கப்பட்ட ஈவுத்தொகை வழங்குதல் கால்நடைகள் பராமரிப்புக்கு வட்டி இல்லா கடன் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் தொடர்ந்து தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் பயன்பெற்று வரும் பயனாளிகளுக்கு கடன்கள் வழங்கும் நிகழ்வு அதற்கான காசோலை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ கே எஸ் விஜயன் அவர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார். விழாவிற்கு
சித்ரா மண்டல இணைப்பதிவாளர் திருவாரூர் ராமசுப்பு துணை பதிவாளர் மன்னார்குடி ஜெகரட்சகன் முதன்மை வருவாயு அலுவலர் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கே வி எஸ் .குமார் கூட்டுறவு பதிவாளர் சென்னை ராமகிருஷ்ணன் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு .
இடும்பவனம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் முப்பெரும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது . அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.