திண்டிவனம் அருகே பயணிகள் நிழல் குடை யில் பஸ் புகுந்த விபத்தில் 18 பேர் காயம்

திண்டிவனம் அருகே பயணிகள் நிழல் குடை யில்  பஸ் புகுந்த விபத்தில் 18 பேர் காயம்
திண்டிவனம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அடுத்த சலவாதி பகுதியில் உள்ள  பயணிகள் நிழல் குடை உள்ளே தனியார் பேருந்து புகுந்து ஏற்படுத்திய விபத்தில் 18 பேர் காயம் அடைந்தனர் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் சென்னையிலிருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது பஸ்சை தூத்துக்குடி மாவட்டம் ஆழிக்குடி அடுத்த அந்தோணி முத்து மகன் சின்னதுரை வயது 45 பஸ் ஓட்டிச் சென்றார் அந்த பஸ்ஸில் இவருடன் சென்னையை சேர்ந்த அக்பர் மகன் அசேன் வயது 45 மாற்று டிரைவர் உடன் இருந்தார்
விபத்து பற்றி டிரைவர் சின்னதுரை கூறும் போது பஸ்ஸில் 7 பயணிகள் மட்டுமே பயணித்ததாகவும் மேலும் சென்னை அடுத்த பெருங்களத்தூரில் பகுதியில் விழுப்புரம் செல்வதற்காக இஸ்லாமிய குடும்பத்தைச் சார்ந்த நபர்கள் விழுப்புரம் செல்வதற்காக பஸ்ஸில் ஏறியதாக கூறினார் மேலும் திண்டிவனம் அருகே செல்லும்போது மேல் பேட்டை மற்றும் சலவாதி கிராமங்களுக்கு நடுவே பஸ்சுக்கு முன்பாக சென்ட்ரல் மீடியனை  ஒட்டியவாறு அதிவேகமாக  இரண்டு கார்கள் சென்று கொண்டிருந்தன அதில் ஒரு கார் திடீரென பஸ்சுக்கு முன்பாக இடது பக்கமாக வந்துவிடவே அந்தக் காரின் மீது பஸ் மோதாமல் இருக்க டிரைவர் இடதுபுறம் பஸ்சை திருப்பும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பயணியர் நிழல் குடை யில் உள்ளே அதிவேகமாகமோதி நின்றது இந்த விபத்தில் பயணிகள் நிழல் கூடையில் அந்தப் பகுதியில் கட்டுமான பணிகள் செய்து வந்த வட மாநிலத்தை சேர்ந்த 10 மேற்பட்ட இளைஞர்கள்  அமர்ந்து கொண்டிருந்தனர் விபத்துக்குள்ளான பஸ்ஸிலிருந்து கண்ணாடி துகள்கள் சேதம் அடைந்த நிழல்குடையில் இருந்த கற்கள் அனைவரின் மீதும் விழுந்ததால் அனைவரும் காயமடைந்தனர் பஸ்ஸின் முன் பகுதி மிகுந்த சேதாரம் அடைந்ததால் முன் பகுதியில் பயணிகள் இறங்க முடியாத நிலையில் பின் பகுதியில் அவசர ஜன்னல் வழியில் பயணிகள் அருகில் இருந்தவர்கள் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர் இந்த விபத்தால் 10 ஆண்களும் சிறுமி உட்பட 8 பெண்களும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ப்பட்ட அனுமதிக்கப்பட்டனர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது ரோசனை காவல் நிலைய போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்  மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்
Previous Post Next Post