கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அதிகாரிகள் நல சங்கம் (AUOWA)சார்பாக திருவாரூர் படிப்பு மையத்தில் பணிபுரியும் மண்டல அலுவலர் .கோ. வெங்கடேசன் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள கோகுலே அரங்கில் பல்கலைக்கழக துணைவேந்தர் முதுமுனைவர் . ராம.கதிரேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் கே.சீதாராமன் தொலைதூரக் கல்வி இயக்குனர் திரு. இரா.சிங்காரவேல் மற்றும் கலைப்புல முதல்வர் கே.விஜயராணி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.. மேலும் விழா ஏற்பாடுகளை அதிகாரிகள் நல சங்க தலைவர் முனைவர் . மு.வரதராஜன் நிர்வாகிகள் திரு.சி.ஆர். வெங்கடேசன் மற்றும் க.கார்த்திகேயன் .இரா.ராஜன்பாபு .மா.ராஜா ஆகியோர் செய்து இருந்தனர் திருவாரூர் படிப்பு மைய பொறுப்பு அதிகாரி முனைவர் .ச.தா. அண்ணாதுரை நன்றி கூறினார்..