புதிதாக கட்டப்பட்டுள்ள ராணிபேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்மா சிலை வைப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுகாவினர் மனு

புதிதாக கட்டப்பட்டுள்ள ராணிபேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்மா சிலை வைப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  அதிமுகாவினர் மனு

ராணிப்பேட்டை மாவட்டம் 
இராணிப்பேட்டை 
மாவட்ட அதிமுக கழக செயலாளரும்
அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு.ரவி
நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார் அந்த மனுவில் கூறியிருப்பதாவது 
இராணிப்பேட்டை மாவட்டம் புதியதாக அதிமுக ஆட்சியில்
அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி K.பழனிச்சாமி அவர்களால்
உருவாக்கப்பட்டு

 உடனடியாக இராணிப்பேட்டையில் மாவட்ட ஆட்சியர்
அலுவலகம் கட்டுவதற்கு 118 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அவருடைய
திருக்கரங்களால் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டிட அடிக்கல்
நாட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த மாவட்டமும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

 உருவாவதற்கு
காரணமான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K.பழனிச்சாமி அவர்கள்
பயணிக்கும் அஇஅதிமுக-இயக்கமேயாகும். புதியதாக திறக்க இருக்கும்
இராணிப்பேடை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்புறம் புரட்சி
தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா அவர்கள் திருஉருவ
சிலைகள் வைப்பதே சால பொருத்தமாகவும்
 இருக்கும்.

எனவே மாவட்டமும், மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் உருவாவதற்கு
காரணமான மறைந்த அதிமுக தலைவர்கள், புரட்சித்தலைவர் MGR
திருவுருவ சிலையும், புரட்சி தலைவி அம்மா அவர்களின் திருவுருவ
சிலையும் புதிய மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு வைக்கும்படி
தாங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Previous Post Next Post