ராணிபேட்டை எஸ்பி.அலுவலகத்தில் சிஎஸ்ஐ பாதிரியார் மீது வாலிபர் புகார்
ராணிப்பேட்டை மாவட்டம்
19.04.22
ராணிப்பேட்டை அடுத்த புளியந்தங்கள் கிராமம் சீனிவாசன் நகரில் வசித்து வரும் ஜெயராஜ் என்பவரின் மகன் விஷ்ணு சாமுவேல் வயது 28 இவர் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார் அந்த மனுவில் கூறியிருப்பதாவது
நான் புளியந்தங்கள் கிராமத்தில் வசித்து வருகிறேன் ஐடிஐ படித்துள்ளேன் என் பெற்றோர்கள் கடந்த
04.12. 2019 அன்று ராணிப்பேட்டை டீச்சர் காலனியில் வசித்து வரும் சிஎஸ்ஐ ஆயர் சசிகுமார் என்பவர் மூலம் அவரது உறவினர் பெண்ணான சென்னை கோயம்பேடு மண்டித் தெருவில் வசிக்கும் காசிதுறை என்பவரின் மகள் கனிமொழியை கிறிஸ்தவ முறைப்படி
ராணிப்பேட்டையில் உள்ள கல்வாரி திருச்சபையில் எனக்கும் கனிமொழிக்கும் திருமணம் செய்துவைத்தனர் இந்த நிலையில் என் மனைவி நர்சிங் படித்து சென்னையில் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார் என்னிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு மேற்படி ஆயர் சசிகுமாருடன் காரில் செல்வார் இது தொடர்ச்சியாக பல மணிநேரம் போனில் பேசி வந்தனர்
இல்லற வாழ்க்கையில் எஎன்னுடன் ஈடுபடுவது இல்லை, இரவில் நானும் என் மனைவியும் இருக்கும்போது என் கையை தெரியாமல் பட்டால் கூட என்னை அடிப்பார், என்னை தனியாகத்தான் படுக்கவைப்பார் அதுபோல 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14, 15,16 தேதிகளில் நான் வேலை செய்யும் மருத்துவமனையின் மூலம் கேம்ப் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவே நான் கேம்ப் போக வேண்டும் என்று பொய்சொல்லி ஆயர் சசிகுமாருடன் சென்றுள்ளார்
இதனை கண்டுபிடித்த நான் வருத்தப்பட்டு என் மனைவியிடம் கேட்டதற்கு என் மனைவி திருமணத்திற்கு முன்பே அவருடன் உறவில் இருந்ததை என்னிடம் கூறினார் இனி நான் உன்னிடம் உள்ள உறவை துண்டித்துக் கொள்கிறேன் என்று கூறினார் இதனால் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது இந்த நிலையில் என் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது
பிறந்த தேதி 13.10.20 அதன்படி நானும் என் மனைவியும் ஒன்று சேரவில்லை அப்போதுதான் அவர் கேம்ப்
போனார் இதனால் நான் என் மனைவியிடம் கேட்டதற்கு ஆம் சசிகுமார் குழந்தைதான் உன்னால் என்ன பன்ன முடியும் என்றும், உன் உன் மேல் மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணை கேஸ் கொடுத்து
குடும்பத்தோடு உள்ளே தள்ளி விடுவேன் என்று என்னையும் என் பெற்றோரையும் மிரட்டினார் அதனால் நான் வேலூர் முதன்மை நீதிமன்றத்தில் விவாகரத்து கோரியும், அதேபோல் ஆயர் சசிகுமார் பேரில் சிஎஸ்ஐ வேலூர் பேராயம் (பிஷப்) பேராயரிடம் புகார் கொடுத்தேன் இதனால் என்னையும் என் குடும்பத்தையும் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆயர் சசிகுமார் தூண்டுதலின் பேரில்
ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் என் மனைவி கனிமொழி என் மீது
09 .04.22 அன்று புகார் கொடுத்தார் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று
என்னையும் என் குடும்பத்தினரையும் மிரட்டி சசிகுமாரை வைத்து உன்னை ஒழித்து விடுவேன் என்று கூறி வருகிறார் எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆயர் சசிகுமாரை அழைத்து விசாரணை செய்து
அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.