பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்களின் தேர்வுகட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் திருத்துறைப்பூண்டி அரசு கலைக் கல்லூரியில் வகுப்பு புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழுக் கூட்டத்தில் நடப்பாண்டிற்கான மாணவர்களி தேர்வு கட்டணத்தை உயர்த்தி பல்கலைக்கழகம் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையில் சென்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டு தேர்வுக் கட்டணம் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதனை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும், பழைய தேர்வு கட்டணத்தை அமல்படுத்திட வேண்டும் என வலியுறுத்தியும் கல்லூரியின் கிளை ஒருங்கிணைப்பாளர் இ.வளவன் தலைமையிலும்
எஸ்.குணால் முன்னிலையிலும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் கோரிக்கையினை விளக்கி அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்ட தலைவர் ஜெபி.வீரபாண்டியன் பேசினார். இப்போராட்டத்தில் கல்லூரி நிர்வாகிகள் எம்.நவீன், எஸ்.மோகன்,
எம்.மணிபாரதி, கே.சரண்,
ஆர்.ராகவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவ, மாணவிகள் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.